”சரி வா போலாம்” என அவளது கையை பிடித்து இழுக்க அவளோ வராமல் இருந்தாள்
”இல்லை நான் வரலை”
“ஏன்?” என தேவா கேட்க
“வரலை” என்றாள்.
”என்னம்மா உன் பிரச்சனை”
என பாட்டி கேட்க
”எனக்கு அங்க வர பிடிக்கலை பாட்டி, நான் அநாதை, அப்படியே இருந்துக்கறேன், என் அப்பா அம்மாவும் இறந்துட்டாங்க, இனி நான் எதுக்கு உங்களுக்கு பாரமா”
“பாராமா அடிப்பாவி, நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன், உன்னை தேடி வந்ததே உன்னை கல்யாணம் பண்ணி கூட்டிட்டுப் போகத்தான். உனக்கு அப்பா அம்மா இல்லைன்னா என்ன நான் இருக்கேன்ல வா போலாம்” என தேவா சொல்ல அவளோ
”இல்லை உங்க வீட்ல கேட்பாங்க, என் அப்பா அம்மா யார்ன்னு? நான் என்ன பதில் சொல்றது?”
“நீ எதையும் சொல்லவேணாம், யாரும் உன்னை கேள்வி கேட்கமாட்டாங்க, இதப்பாரு சொன்னாக் கேளும்மா வா” என அவன் அழைக்க அவள் சிலை போல பேசாமல் அமர்ந்திருக்கவே தேவா பாட்டியை பாவமாக பார்க்க அந்நேரம் அவனுக்கு போன் வரவும் எடுத்துப் பேசினான்
”ஹலோ தாத்தா”