(Reading time: 32 - 63 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

கொடைக்கானல்

   

கொடைக்கானல் வரவும் எதிர்பட்ட ஆட்களிடம் விசாரித்தப்படியே சரியான வீட்டிற்குச் சென்று சேர்ந்தார்கள் மூவரும்.

   

சிறிய வீடு என்றாலும் பார்க்க அது அழகாக இருந்தது முன்னாடி கார்டன் வேறு அங்கு ஒரு தம்பதிகள் பேசிக் கொண்டிருக்கவே தேவாவின் கார் வரவும் அவர்கள் யார் என்ன என பார்க்கலானார்கள்.

   

காரிலிருந்து 3 பேர் இறங்கியதும் நேராக அவர்களிடம் வந்து நின்றார்கள். தங்களை அறிமுகம் செய்த பின் கீர்த்தனாவைப் பற்றிக் கேட்க அந்தப் பெண்மணியோ

   

”நேத்து இங்கதான் வந்தா, வந்தப்பவே சோகமாக இருந்தா என்ன ஏதுன்னு கேட்டேன், என் அப்பா அம்மாவை பார்க்கனும் அவங்க யார்ன்னு தெரியுமான்னு கேட்டா, நான்தான் அவங்களை பத்தின விவரங்களை சொல்லி அவங்க இறந்துட்டாங்கன்னு சொன்னேன்.”

   

“அப்புறம் எங்க இருக்கா”

   

“வேலைக்கு போறேன், இனிமே நீங்க எனக்கு பணம் தரவேணாம் அப்படின்னு சொன்னா”

   

“இப்ப அவள் எங்க”

   

”தெரியலை”

   

“தெரியலைன்னு சொன்னா எப்படி” என தேவா கத்த பாட்டி அவனை சமாதானம் செய்தார்

   

”இதப்பாருங்க அவள் போட்டோ இருந்தா கொடுங்க நாங்க தேடிக்கறோம்”

   

“போட்டோ இல்லையே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.