“சாப்பிட்டாளா”
“ஆச்சி”
“அவளை பத்திரமா பார்த்துக்கடா”
“சரி தாத்தா அங்க என்ன நிலைமை அதைச் சொல்லு” என கேட்க
”நீ போனதும் போலீஸ்கிட்ட போயிட்டான் அந்த சுந்தரம்”
“பேப்பர் பார்த்தேன்”
“மானம் போனதால பிபி அதிகமாகி, வீட்ல ரெஸ்ட் எடுக்கறான் சுந்தரம்”
“சரி சரி போட்டும் சரண்யா என்ன ஆனாள்”
“தெரியலை ஒண்ணு ஊருக்குப் போயிருக்கனும் இல்ல நீ வர்றதுக்காக இந்த ஊர்லயே காத்திருக்கனும்”
”விக்ரம் என்னவானான்”
“அவனை நான் விரட்டிட்டேன், அவன் பவி அந்த வீடல இருந்தவங்களை ஊரை விட்டே விரட்டிட்டேன்”
“ஏன் தாத்தா அப்படி செஞ்சீங்க அவன் பாவம் தற்கொலை பண்ணிப்பான்”
“அவனைப்பத்தி நீ பேசாத, அவனால உன்னோட மொத்த வாழ்க்கையும் இழந்துட்டியே, நீ கஷ்டபட்டு உருவாக்கின ட்ரான்ஸ்போர்ட், ஒர்கஷாப், உன்னோட கீர்த்தனா எல்லாம் போச்சேடா”