(Reading time: 32 - 63 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

”வேற எங்க போயிருப்பாள்ன்னு நீங்க நினைக்கறீங்க”

   

“அவளுக்கு இங்க ஒரு பிரெண்ட் வீடு இருக்கு, அங்க போயிருப்பா” என சொல்ல அந்த ப்ரெண்டின் அட்ரஸை பெற்றுக் கொண்டு நேராக அங்கு சென்று விசாரிக்க அவர்களோ அங்கிருக்கும் ஒரு ஆசிரமத்தில் அவளை சேர்ந்துவிட்டதாக சொல்ல இறுதியில் ஆசிரமத்திற்குச் சென்று சேர்ந்தார்கள் மூவரும், அங்கிருந்த தலைவியிடம் பேசி ஒருவழியாக கீர்த்தனாவை கண்டுபிடித்தார்கள்

   

அவள் கார்டனில் ஏதோ தோட்ட வேலை செய்துக் கொண்டிருக்க நேராக அவளிடம் சென்று நின்றான் தேவா

   

”கீர்த்தனா” என அழைக்க அவளோ திரும்பிப் பார்த்து வியந்தாள். முகம் மலர சந்தோஷப்பட்டாள் ஆனால் அது ஒரு நொடிதான் உடனே தன் முகத்தை திருப்பிக் கொள்ள 

   

”கீர்த்தனா என்னாச்சி உனக்கு எப்படி என்னை விட்டு வர மனசு வந்திச்சி” என கேட்க அவளோ பதில் சொல்லாமல் திரும்பவும் வேலை செய்வதைக் கண்டு 

   

”கீர்த்தனா என்னை பிடிக்கலையா” என கேட்க அவளிடம் பலத்த மௌனம். வேலை செய்தவளை விடாப்பிடியாக இழுத்து நிற்க வைக்க அவள் கண்கள் கலங்கியிருப்பதைக் கண்டு

   

”என்னம்மா ஆச்சி ஏன் இப்படி அவனை விட்டுட்டுப் போன“

   

“என்னை விடுங்க நீங்க போங்க”

   

“எங்க போங்கற வா உன்னை கூட்டிட்டு போறேன் வா”

   

“இல்லை நான் வரலை”

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.