“சரி தாத்தா அதுக்கென்ன கீர்த்தனாவை தேடித்தான் நான் கொடைக்கானல் போறேன், அவள் கிடைக்கட்டும் கிடைச்சதும் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு கூட்டிட்டு வரேன். வந்த பின்னாடி அப்பாட்ட இருந்து ட்ரான்ஸ்போரட்டும், ஒர்க் ஷாப்பையும் விலைக்கு வாங்கிக்கிறேன்”
“விலைக்கா பணம் ஏதுடா உனக்கு”
“நான் கன்ஸ்ட்ரக்ஷன்ல சம்பாதிக்கற பணத்தை தாஸ் பேர்ல பேங்க்ல போட்டு வைச்சிருக்கேன். அது போதும்”
“என்னவோ போடா வேற ஏதாவது வேணும்னா சொல்லுடா”
“கண்டிப்பா சொல்றேன்”
“அப்புறம் தேவா” என அவர் இழுக்க
”என்ன தாத்தா சொல்லுங்க”
“ஒண்ணுமில்லை அது ஒரு சின்ன விண்ணப்பம்”
“என்ன இது தாத்தா இப்படி சொல்றீங்க, என்ன விசயம் சொல்லுங்க தாத்தா”
”அது தாமரைகிட்ட பேசனும்னு ஆசையா இருக்குடா”
“உனக்கெதுக்கு அடுத்தவன் பொண்டாட்டி, உன் பொண்டாட்டிகிட்ட பேசிக்க போ, தாமரை தூங்குது, நான் வேற வண்டியை ஓட்டறேன் போனை வை” என போனை வைத்துவிட்டு காரை ஓட்ட தாத்தாவிற்கு கஷ்டமாகிப் போனது. 1 மணி நேரம் கழித்து திரும்பவும் போன் செய்தார்.