”ஹலோ சொல்லுங்க தாத்தா”
“தாமரை என்ன செய்றா”
“தூங்கறா தாத்தா”
“அவள்ட்ட ஒரு முறை பேசனும்டா”
“அவள் தூங்கறா இப்ப எப்படி அவளை நான் எழுப்பறது”
“சரி சரி அவள் தூங்கட்டும் எழுந்தபின்னாடி போன் கொடு நான் பேசனும்”
”நீ என்ன பேசுவேன்னு எனக்கு நல்லாவே தெரியும், கீர்த்தனாவை பத்தியும் என்னைப் பத்தியும்தானே”
“இல்லைடா”
“அப்ப சுந்தரம் பத்தியா ஓ ஊருக்கு வந்ததும் போட்ட கேஸை வாபஸ் வாங்கறதுக்காகத்தானே, அதை நான் பேசிட்டேன் தாத்தா அவளும் அதுக்கு சரின்னு சொல்லிட்டா” என சொல்ல
”ஒரு முறை அவள்ட்ட பேசனும்னு ஆசையா இருக்குடா”
“என்ன விசயம் சொல்லு, நான் சொல்லிக்கிறேன், நானே கீர்த்தனாவை தேடிப் போய் அவள் இல்லைன்னா என்ன செய்றதுன்னு இருக்கேன் இதுல நீ வேற” என கத்த அவரோ
”சரி சரி அவள் தூங்கி எழுந்தபின்னாடி போன் கொடு நான் பேசனும்”
“பேசி என்ன செய்யப் போற போனை வை தாத்தா” என போனை கட் செய்தான். தாஸ் நடப்பதைக் கண்டு உள்ளுக்குள் சிந்தித்தான். பாவம் தாத்தா என மட்டும் நினைத்தான்.