(Reading time: 32 - 63 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“ஏன்?”

   

”ம்ஹூம்”

   

“பவியை நினைச்சி பயப்படறியா, அவளையும் அவள் குடும்பத்தையும் ஊரை விட்டே விரட்டிட்டாங்க தாத்தா, அப்புறம் சரண்யாவா அவள் சென்னைக்கு போயிட்டா, இப்ப யாரும் நமக்கு எதிரி இல்லை நீ வாம்மா” என சொல்ல அவளோ முடியாது என  தலையாட்ட தேவா அவளை இழுத்துக் கொண்டு அங்கு தூரத்தில் இருந்த தாமரையிடம் விட்டான். தாமரையைக் கண்டதும் ஆசையாக அவரை கட்டிப்பிடித்து அழவே தாமரையும்

   

”என் பாதுகாப்புல நீ இருந்த ஏன் இப்படி என்கிட்ட சொல்லாம ஓடி வந்துட்ட” என கேட்க அவள் அழுகையோடு

   

”அவங்க ரொம்ப கேவலமா பேசிட்டாங்க, என் பிறப்பு சரியில்லை அப்படி இப்படின்னு” என சொல்லி அழவும்

   

”சரி சரி அமைதியா இரு, அழாத அவங்க சொன்னா சொல்லிட்டுப் போறாங்க, உனக்கென்ன நீ தேவாவை பத்தி நினைச்சியா”

   

“எனக்கு அந்த சமயம் எதுவும் புரியலை.”

   

“சரி சரி விடு விடு வா” என அங்கிருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்துக் கொண்டார்கள் இருவரும், தாஸ் கீர்த்தனாவிடம் வந்து நின்று ஏதோ சைகை செய்ய அதை அப்படியே கீர்த்தனாவிடம் சொன்னான் தேவா

   

”இப்படியா முட்டாளா இருப்ப, அவளுங்க சொன்னா போயிடனுமா, நான் இருக்கேன்ல அண்ணா இருக்கேன்ல, என்கிட்ட சொல்லியிருக்கனும் நீ, இப்படியா செய்வ” என அவன் வரிசையாக பேச பேச கீர்த்தனாவோ

   

”சாரிண்ணா” என அவள் சொல்ல அவனும் அமைதியானான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.