(Reading time: 36 - 72 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“வேற வழியில்லையே அவளோட தாத்தா என்ன செஞ்சார் பார்த்தியா, எல்லார் கால்லயும் விழப்போனாருடா”

   

“அதுக்கு நான்தான் கிடைச்சேனா அவள் வில்லி தாத்தா”

   

“பேசாம இருடா தாமரை இருக்காள்ல அவள் எல்லாம் பார்த்துக்குவா”

   

“அப்பவும் நீ பார்த்துக்க மாட்ட, அப்புறம் ஏன் இங்க இருக்க கிளம்பு போ, உன் வீட்டுக்குப் போ போதும் நீ சைட் அடிச்சது” என அவரை எழுப்பிவிட அவரோ

   

”இந்தாடா மொய்” என கையில் இருந்த பத்திரத்தை நீட்ட

   

”என்ன இது”

   

“நிலப்பத்திரம் உனக்குத்தான் வாங்கிக்க”

   

“எனக்கு வேணாம் என்னால அதையெல்லாம் பார்த்துக்க முடியாது, நீயே வைச்சிக்க அதான் மொய்யா சரண்யாவை என் தலையில கட்டினியே போதாதா, போ தாத்தா” என கத்த அதை அங்கிருந்த அனைவரும் கேட்டார்கள். 

   

கீர்த்தனாவோ தாமரை பாட்டியின் பக்கமே இருந்தாள், சரண்யாவை பார்த்து வெறுத்தாள். தன்னை கேவலமாக பேசி விரட்டினாளே என்ற கோபம்  கீர்த்திக்கு, சரண்யாவோ தேவா பேசியதைக்கண்டு நொந்து போனவள் கீர்த்தனாவிடம் 

   

”சாரி கீர்த்தி, என்னை மன்னிச்சிடு பவி பேச்சைக் கேட்டு நான் அப்படி உன்னை அவமானப்படுத்திட்டேன் சாரி ரியலி ஐ அம் வெரி சாரி” என சொல்ல அவளோ

   

”ஏன் இப்படி நடிக்கற எனக்கு உன் சாரி வேணாம் நீ ஆசைப்பட்டதுதான் கிடைச்சிடுச்சே, அப்புறம் ஏன் என்கிட்ட வர்ற வராத போ” என சொல்லிவிட்டு அவசரமாக ஒரு அறைக்குள் சென்றாள். அவள் சென்றதும் அடுத்து தாமரையிடம் வந்த சரண்யா கைகூப்பி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.