”அதுவும் சரிதான் யார்கூட இருக்கேன்னு சொல்டா” என கேட்க
”தாமரை” என கத்தவும் வைத்தி வந்தார்
”எதுக்குடா அவள்ட்ட கத்தற, உன்னால முடியலைன்னா விடேன்” என சொல்லியவர் தாமரையை ஆசையாகப் பார்த்தார்
”தாமரை” என அன்பாக அழைக்க அந்நேரம் சுந்தரம் வந்தார்
”தாமரை” என கோபமாக அழைக்க தாமரை நொந்தே போனார்
”இங்க என்ன செய்ற வா வீட்டுக்குப் போலாம்”
“நான்தான் சொன்னேனே தேவாவை விட்டுவிட்டு நான் வரமாட்டேன்னு”
“நீ ஏன் இங்க இருக்கனும்னு அசைப்படறேன்னு எனக்கு தெரியும்” என அவர் வைத்தியை பார்க்க தாமரையோ கோபத்தில் கத்தினார்
”சே இத்தனை வருஷமாகியும் இந்த சந்தேக புத்தி போகலையா உங்களுக்கு“ என கத்த அவரோ
”ஆமாம் போகலை வா” என கட்டாயமாக அவரை இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்ல பின்னாடியே வைத்தி தாத்தாவும் சென்றார். அதை அனைத்தும் பார்த்த தேவாவுக்கு சிரிப்பாக வந்தது
”கொள்ளு பேரன் பேத்தி எடுத்தாக் கூட இந்த டாக்டர் தாத்தாவுக்கு பயம் இருக்கும் போல, இதுக்கு எதுக்கு தாமரையை கட்டிக்கனும், இப்ப வரைக்கும் ஏன் பயப்படனும் அய்யோ அய்யோ தாமரையும் இல்லையா இனி இந்த 2 பொண்ணுங்களோட நான் எப்படி குடும்பம் நடத்துவேன்” என சொல்ல தாஸ் முன்னாடி வந்தான் நான் இருக்கேன் உனக்கு துணைக்கு என சைகை செய்ய