”பாட்டி மன்னிச்சிடுங்க தப்பு என்னோடதுதான், நான் ஆசைப்பட்டேன் விரும்பினேன். என் காதலுக்காக இப்படி செஞ்சேன். மத்தப்படி யார் வாழ்க்கையையும் கெடுக்க நான் வரலை”
“இப்ப நீ இப்படி பேசறதால எதுவும் மாறிடாது வாழ்க்கையை ஆரம்பி போ போய் ரெஸ்ட் எடு”
“எங்க போறது ஒரு ரூம்தான் இருக்கு, அதுவும் கீர்த்தனா இருக்காளே நான் போனா அவள் என்ன நினைப்பா”
“அவளோட புருஷனையே நீ பங்கு போட்டுக்கிட்ட, அவளோட படுக்கையிலயும் நீ இடம் பிடுங்கிக்கிட்ட அப்புறம் என்ன போ இருக்கறது 2 ரூம், ஒண்ணுத்துல நான் இருக்கேன், ஒண்ணு தேவா இருப்பான் நீயும் தேவாகூடவே இரு போ” என சொல்ல
”நான் வேணா உங்க கூட இருக்கேனே”
“வேணாம்மா நீ ஆசைப்பட்ட வாழ்க்கையை சண்டை போட்டு அடைஞ்சிட்ட, அதை வாழப்பாரு போம்மா”
“என் மேல கோபமா”
“கோபம் இல்லாம இருக்குமா உன்னால கீர்த்தனா வாழ்க்கை நாசமா போகும்னு தெரிஞ்சது உன்னை நானே விரட்டிடுவேன் இல்லை கொன்னுடுவேன் இதுக்கு மேல நான் வாழ்ந்து எதுவும் ஆகப் போறதில்லை, தேவாவோட வாழ்க்கை சந்தோஷத்துக்காக நான் என்ன வேணம்னாலும் செய்வேன் கவனம் எங்களை 2 முறை ஏமாத்திட்ட 3வது முறை எங்களை நீ ஏமாத்த நினைச்ச அவ்ளோதான்” என மிரட்ட அவளும்
”இல்லை இல்லை எல்லாமே என் காதலுக்காகதான் செஞ்சேன் இனிமே நான் யாரையும் ஏமாத்தமாட்டேன்” என சொல்ல