(Reading time: 36 - 72 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

சென்றவன், 5 நிமிடத்தில் வெளியே வந்தான். பக்கத்து அறையில் யாரோ அழுவது போல கேட்கவே எட்டிப்பார்க்க அங்கு சரண்யா அழுதுக்கொண்டிருக்கவும் அவளிடம் சென்று நின்றான். அவனைக் கண்டதும் கண்களை துடைத்துக் கொண்டவளைக் கண்டு

   

”எதுக்கு இப்ப அழற?” என கேட்க

   

”இல்லை சும்மாதான்”

   

“சும்மாவா இதப்பாரு நீ பாட்டுக்கு அழுது அதை எவனாவது பார்த்து உன் தாத்தாகிட்ட சொல்லி என்னை ஜெயில்ல தள்ளறதுக்கா”

   

“சே சே அப்படியெல்லாம் இல்ல நான் என் அம்மாவை நினைச்சி அழறேன்”

   

“அவங்களுக்கென்ன”

   

“அவங்க இறந்துட்டாங்க இப்ப அவங்க நினைப்பு வருது”

   

“பரவாயில்லையே உனக்கு உணர்ச்சிகள் கூட இருக்கா”

   

”ஏன் இப்படி சொல்றீங்க?” என ஆதங்கமாக கேட்க

   

”அம்மா மேல பாசமோ”

   

“இருக்காதா சின்னப்பவே அம்மா இறந்துட்டாங்க”

   

“ஓ சரி அப்புறம்”

   

“அவங்க இல்லைன்னாலும் எனக்கு அவங்களை பிடிக்கும், இப்ப அவங்க நினைப்பே வருது. இங்க நான் தனியா இருக்கறப்ப கஷ்டமாயிருக்கு, யாரும் என்கிட்ட பேசலை” என சொல்லி கண்கலங்கவும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.