”எனக்கு காதல் பண்ண வரலைன்னாலும் நான் கத்துக்குவேன்”
“எப்படி கத்துக்குவ”
“கூகுள்ல சர்ச் பண்ணி”
“ஆஹா குடும்ப குத்துவிளக்கே வா வா கூகுள்ல சர்ச் பண்ணி நீ காதலை கத்துக்கப் போறியா தேவையில்லை, காதல் எல்லாம் தானா வரனும் கீர்த்தனாவுக்கு என் மேல வந்துச்சே அது காதல், உனக்கு வந்தது பிடிவாதம் என்னை பொம்மை போல நீ பார்த்த எனக்கு உயிர் இருக்குன்னு அவள் பார்த்தா வித்தியாசம் புரியுதா” என கேட்க அவளோ இல்லை என தலையாட்டவே சிரித்தான்.
”நல்ல பொண்ணு நீ வா வா சாப்பிட வா முதல்ல முகத்தை கழுவு, அழுது வடிஞ்சிக்கிட்டு வராத பார்க்கறவங்க தப்பா நினைப்பாங்க” என சொல்ல அவளும் பாத்ரூம்க்கு செல்ல அங்கிருந்து வெளியே வந்த தேவாவைக் கண்ட கீர்த்தனா அமைதியாக தலை குனிந்திருந்தாள். அவளிடம் வந்தான்
”சாப்பாடு வைச்சிட்டேன்” என அவள் சொல்ல அதில் உயிர்ப்பு இல்லாமல் இருப்பதைக் கண்டு
“சரி ஏன் ஒரு மாதிரியா இருக்க”
“ஒண்ணுமில்லை சும்மாதான்”
“சரண்யா ரூம்ல இருந்து வந்ததால என்னை தப்பா நினைக்கிறியா”
“அப்படியில்லை தாமரை பாட்டி என்ன ஆனாங்கன்னு தெரியலை அதை நினைச்சி கவலையா இருக்கு” என அவள் சொல்லச் சிரித்தான் தேவா
”உன் குடும்ப வாழ்க்கையே இங்க பங்கு போட்டு இருக்கு, அதைப்பத்தி நினைக்காம