”அவங்க சாப்பிடவேயில்லை. அப்படியே போயிட்டாங்க பாருங்க தட்டுல எல்லாம் அப்படியே இருக்கு”
“இதப்பாரு அவளுக்கு பசிச்சா அவளே வருவா, இது என்ன அவள் வீடா, தேவைன்னா வேலைக்காரங்க போய் கெஞ்சறதுக்கு, திமிரைப் பாரு அவளை” என சொல்லியவன்
”சரண்யா ஏய் சரண்யா இங்க வா” என கத்தி அழைக்க சில நொடிகளில் அழுத முகத்துடன் அவன் முன் வந்து நின்றாள்
”அறிவிருக்கா உனக்கு தட்டுல சாப்பாடு போட்ட பின்னாடி யாராவது எழுந்து போவாங்களா, உன் வீட்ல இருக்கற மாதிரி என் வீட்ல இருந்தா தொலைச்சிடுவேன். ஒழுங்கா உட்கார்ந்து சாப்பிட்டு தெம்பா அழு யாரும் உன்னை தடுக்கலை” என சொல்ல அவளோ
”ஏன் இப்படி பேசறீங்க”
“பின்ன என்ன கஷ்டபட்டு இருக்கற பணத்தில சமைச்சி வைச்சா அதை துச்சமா நினைச்சி சாப்பிடாம போனா என்ன அர்த்தம்”
“நான் அப்படி நினைக்கலை. நிஜமா கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டேன் தானாவே அழுகை வரவும் எழுந்து போயிட்டேன்”
“சந்தோஷம் உட்காரு சாப்பிடு” என சொல்ல அவளும் அமைதியாக அமர்ந்து சாப்பிடலானாள்.
தாஸும் தேவாவும் சாப்பிட்டு எழுந்துக் கொள்ள கீர்த்தனா சாப்பிட அமர்ந்தாள்.
”தாஸ் நாளையிலிருந்து வேலையை ஆரம்பிக்கனும்டா” என சொல்ல அவனோ என்ன வேலை என கேட்க
”என்ன வேலைன்னா என்ன அர்த்தம் வீடு கட்டறதுதான்” என சொல்ல அவனோ லாரி