”அழாதேம்மா அழாத எல்லாம் சரியாயிடும் நான் என் கதையை உனக்குச் சொல்றேன் கேளு அப்ப நீயே புரிஞ்சிக்குவ”
“உங்க கதையா என்ன கதை பாட்டி”
“சொல்றேன் கேளு அப்ப இந்த ஊர்லயே ஒரு பள்ளிக்கூடம்தான் இருந்திச்சி, அதுலதான் எல்லா புள்ளைகளையும் சேர்ப்பாங்க அப்ப நான் ரொம்ப அழகா இருப்பேன். இந்த ஊர்லயே நான்தான் அழகுன்னா பார்த்துக்க முதல் முதல்ல என்னை பள்ளிக்கூடத்துக்கு கூட்டிப் போனாரு என் அப்பா அப்ப நான் பயந்துட்டேன் ஒரே அழுகை அப்பதான் நான் அவனை பார்த்தேன்...” என கீர்த்தனாவிற்கு சொன்ன கதையை அப்படியே சரண்யாவிடம் சொல்லி அந்த இரவை கழித்தார் தாமரை.
தாமரை பாட்டியின் கதையால் சரண்யாவின் மனம் மாறுமா? சரண்யா கீர்த்தனா இருவருக்கும் இடையே உள்ள பூசல் போகுமா?? தேவா கீர்த்தனாவை ஏற்றுக் கொண்டது போல சரண்யாவையும் ஏற்றுக் கொள்வானா???
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்...