”சரி உன் விருப்பம் ஆனா கொண்டாந்து விடனும்”
“கண்டிப்பா”
“அப்புறம் ஒரு கன்டிஷன்”
“என்ன அது”
“உன் தாத்தாவை உன் வீட்ல சேர்க்க கூடாது”
“உன் புத்தியை பாரு, என் தாத்தா நல்லவரு, உன்னை மாதிரி தப்பான எண்ணம் கொண்டவர் இல்லை, தாமரை இந்த வீட்ல இருந்தப்பவே அவள்கிட்ட ஒரு வார்த்தை பேசாதவரு, என் வீட்ல இருந்தா மட்டும் வந்துடுவாராக்கும்” என சொல்லிவிட்டு
”தாமரை போலாமா” என சொல்ல அவரும் சரியென பலமாக தலையாட்ட உடனே மூன்று பெண்களுடன் காரில் ஏறி தன் வீட்டை அடைந்தான் தேவா
கீர்த்தனாவோ தேவாவிடம்
”என்ன சமையல் செய்யட்டும் டிபனா இல்லை சாப்பாடா”
“சாப்பாடு வேணாம்மா சாப்பிட்டு தூங்கறதுக்கா, நைட்ல வேலையிருக்கு டிபன் செய் போதும் எங்க அவள்”
“யாரு சரண்யாவா”
“ஆமாம்”
“நான் இங்க இருக்கேன்” என அவசரமாக வந்து நின்றாள் சரண்யா