“ஆசையில்லை தாமரை வேற வழியில்லை அவ்ளோதான், அவளால பஞ்சாயத்து வராம இருக்கனும் அதான்”
”அப்ப அவளை விடு கொஞ்ச நாள் போகட்டும், அவள் ஏதோ உன்னை காதலிக்கறதா சொல்றாளே நிஜமாவே அவள் காதல் உனக்குத் தெரிஞ்சி உனக்கு அப்ப அவளை பிடிச்சிருந்தா தாரளமா அவள் கூட குடும்பம் நடத்து”
“இப்ப நான் கீர்த்தனாவோட இருக்கலாமா”
“தாராளமா இன்னிக்கு நைட் நான் சரண்யாவை என்கூட படுக்க வைச்சிக்கிறேன், இது ஒரு பிரச்சனைன்னு என்னை தேடி வந்த பாரு சரியான ஆளுடா நீ” என திட்ட
”ம்க்கும் என் நேரம்” என சொல்லி வேறு கதைகளை பேசி முடிக்க டிபன் வரவும் திருப்தியாக நால்வரும் சாப்பிட்டு முடித்த கையோடு தேவா கீர்த்தனாவை ஆசையாக பார்த்தான். அவளோ வெட்கத்துடன் பார்க்கவே சரண்யாவிற்கு அது புரிந்துவிட்டது அவளாகவே தாமரையிடம் வந்தாள்
”பாட்டி வாங்க நாம போய் தூங்கலாம் தூக்கம் வருது வாங்க” என அவரை அழைக்க அவரும் சிரித்துக் கொண்டே
”புத்திசாலி பொண்ணுதான் நீ, சொல்ல வேண்டிய அவசியம் இல்லாம தானா புரிஞ்சிக்கிட்ட, வா வா காலம் போனா தானா உனக்கும் நல்லது நடக்கும்” என சொல்ல
”நான் காத்திருப்பேன் பாட்டி” என தேவாவை பார்த்து சொல்ல அவனோ இல்லை என தலையாட்ட அதற்கும் அவள் சிரித்துவிட்டு பாட்டியுடன் அறைக்கு செல்ல தேவா இரண்டே எட்டில் கீர்த்தனாவை பிடித்தவன் அவளை தூக்கிக் கொண்டு தன் அறைக்குச் சென்றான்.
பாட்டியுடன் இருந்த சரண்யாவோ கண்கள் கலங்கி கன்னம் நனைய அதைப்பார்த்த தாமரையோ அவளுக்கு