(Reading time: 36 - 72 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

“ஓ அப்படியா, ஒரு விசயம் உனக்காவது அம்மா மட்டும்தான் இல்லை ஆனா அப்பா தாத்தா சொத்து பத்துன்னு எக்கச்சக்கம் இருக்கு, கீர்த்தனாவுக்கு யாருமே இல்லை அப்பா அம்மா யார்ன்னு தெரியாது சொத்துபத்து எதுவும் கிடையாது. ஒரு நாளும் தனக்கு யாரும் இல்லன்னு அவள் அழுததில்லை தெரியுமா அவளுக்கு போய் துரோகம் பண்ண உனக்கு எப்படி மனசு வந்துச்சி”

   

“எனக்கு கீர்த்தனாவை பத்தி எதுவும் தெரியாது, நான் என் காதலுக்காகத்தான்” என அவள் பேசி முடிக்கும் முன்பே

   

“ஓ காதல் சரி எங்க உன் காதலை காட்டு” என கேட்க அவள் வியந்தாள்

   

”என்னை காதல் பண்ணும்மா உன் முன்னாடிதானே நிக்கறேன் எங்க உன் ஆத்மார்த்தமான காதலை காட்டு பார்க்கலாம் நானும் தெரிஞ்சிக்கிறேன். இவளோ கலவரம் செஞ்சி சண்டை போட்டு பாவம் உன் தாத்தா எவ்ளோ பெரிய மனுசன் உனக்காக எல்லார் கால்லயும் விழுந்து எப்படியோ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட, அவ்ளோ உன்னதமான உன்னோட காதல் என்ன ஏதுன்னு நானும் பார்க்கறேன் கொஞ்சம் காட்டும்மா” என தேவா கேட்க சரண்யா திணறினாள். 

   

”காட்டுன்னா எப்படி காட்டறது” என கேட்டவள்

   

”நீ காட்டலைன்னா நான் எப்படி தெரிஞ்சிக்கறது” என திருப்பிக் கேட்க அவளோ அவனிடம் மென்மையாக சிரித்துவிட்டு அருகில் வந்து

   

”ஐ லவ் யு” என்றாள்

   

”என்ன இது”

   

”காதல் செய்றேன்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.