”உன் புருஷனை கேளு” என அவன் சைகை செய்ய
”அட சொல்லு”
என கேட்க அவனோ அவரிடம்
”வைத்தியம் பார்ப்பதாக சொல்ல” அதோடு அமைதியானார் தாமரை.
தன் அறைக்கு செல்லு முன் சரண்யாவின் அறை வரவே உள்ளே பார்த்தான் தேவா. உறங்கிக் கொண்டிருந்தவளைக் கண்டு கோபமாக உள்ளே சென்றவன் அவள் பக்கத்தில் அமர்ந்து அவளது போர்வையை விலக்க கலைந்து போன சேலையால் அவளது அங்கங்கள் தெரியவே சட்டென போர்வையை போர்த்திவிட்டு அவளது தோளை போட்டு உலுக்கினான்
”ஏய் சரண்யா எழுடி எழு எழு” என கத்த அவளும் சற்று புரண்டு திரும்பி படுத்து மெதுவாக கண்விழித்து எதிரே இருந்த தேவாவை பார்த்துச் சிரித்தாள்
”குட் மார்னிங்”
”மணி என்னாகுது நீ இன்னும் தூங்கற குடும்ப பொண்ணா இருக்க மாட்டியா”
என கேட்க அவள் உடனே எழுந்து அமர அவனோ முகத்தை திருப்பவே
”ஏன் முகத்தை திருப்பிக்கறீங்க”
“முதல்ல உன் சேலையை சரி பண்ணு” என சொல்ல அவளோ தன் சேலை முந்தானையை சரிசெய்துவிட்டு அவனிடம்
”சரி பண்ணிட்டேன்” என்றாள் அதன் பிறகே அவன் முகத்தை திருப்பி அவளைப் பார்க்க அவளோ