”உன் வீட்ல இருந்து போன் பண்ணாங்களா”
“இல்லை”
“என்னவானார் உங்கப்பா”
“கோபமா இருக்காரு”
“அப்புறம்”
“என்னை திட்டி விரட்டிட்டாரு”
“அப்புறம்”
“சொத்துல நயா பைசா கிடையாதுன்னுட்டாரு”
”ஓ அப்படியா அதானா பணம் இல்லை வேற வழியில்லை வாழறதுக்கு என்ன செய்றதுன்னு என்னை பிடிச்சியா நீ கில்லாடிதான் போ” என சொல்ல அவளுக்கு அழுகையே வந்தது
”எனக்கு படிப்பிருக்கு அதை வைச்சி நான் வேலைக்கு போய் கூட நான் சம்பாதிப்பேன், உங்களை நான் ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன் வேற வழியில்லாம எல்லாம் இல்லை” என அவள் விக்கி விக்கி அழுதுக் கொண்டு சொன்ன விதம் அவனுக்குப் பிடித்து சிரித்துக் கொண்டிருக்க பூவுடன் வந்த தாஸோ சரண்யா அழுவதையும் தேவா சிரிப்பதையும் கண்டு பயந்து உடனே காரில் ஏறி சரண்யாவிடம் ஏதோ சைகை செய்ய அவளோ
”புரியலை” என்றாள். அவனோ தேவாவிடம்