அவளை கூட்டிட்டு காலேஜ்க்கு போறது இல்லையா நேரா அப்பாகிட்ட விடறது, அவர் ஆபிஸ்ல விட்டுடறேன் அவங்கதானே இவளை என் தலையில கட்டி வைச்சாங்க அவங்களாச்சி அவளாச்சி.” என சொல்லிவிட்டு அவன் வெளியே சென்றுவிட கீர்த்தனா தாமரையிடம்
”இவர் போக்கே வித்தியாசமா இருக்கு பாட்டி எனக்கு தப்பா படுது”
”இதப்பாரும்மா அவன் மனசுல இப்ப சரண்யாவும் என் பொண்டாட்டின்னு ஒரு நினைப்பு ஓடுது. உன்னை வைச்சிக்கிட்டு அவளோட குடும்பம் நடத்த அவன் யோசிக்கறான். அதான் 2 வீடு கட்டி தனித்தனியா உங்க ரெண்டு பேரையும் வைச்சிடலாம்னு இருக்கான் வேற ஒண்ணுமில்லை”
“ஆனா அவருக்கு சரண்யாவை பிடிக்காதே”
“ஆனா இப்ப அவள் அவனோட பொண்டாட்டியாச்சே இப்ப நீ கர்ப்பமாகி, அவள் ஆகலைன்னா தப்பு யார் மேல உன் புருஷனைத்தானே சொல்வாங்க எல்லாரும், பாவம் சரண்யான்னு சொல்வாங்க, தேவாவை திட்டுவாங்க அது எதுக்குன்னு பார்க்கறான் போல” என சொல்ல அவளோ
”அதுக்கு இந்த வீட்லயே அவர் குடும்பம் நடத்தலாமே, நானா வேணாம்னு சொன்னேன்” என முக்கி முனகிச் சொல்ல அவர் சிரித்தார்
”ஓ அப்படியா எங்க அவன் வரட்டும் வந்த உடனே நீயே இதைச் சொல்லு பார்ப்போம்”
“நானா” என இழுக்க
”உன்னால முடியாதுல்ல அப்புறம் என்ன அமைதியா இரு, அவனே பார்த்துக்குவான் இப்ப உன்னை வரைய சொல்லிட்டுப் போனான்ல நீ அந்த வேலையை பாரு, நான் சமையல் பார்த்துக்கறேன்” என சொல்லவும் அவளும் சரியென்றாள்.
காருக்கு முதல் ஆளாக வந்த தாஸ் உள்ளே அமைதியாக உட்கார்ந்திருந்த சரண்யாவிடம்