விட்டது. அதைப்பார்த்த தாமரையோ நொந்து போய்
”இவளையும் கூட்டிட்டு போடா” என கீர்த்தனாவை கைகாட்ட
”அவள்தான் காலையிலேயே கோயிலுக்கு போய் வந்துட்டாளே” என சொல்லும் போதே சரண்யா வர அவளைப் பார்த்தான். சோகமாக இருக்கவே
”வா கோயிலுக்கு போலாம்” என சொல்ல அவளோ
”இல்லை நான் வரலை” என ஈனக்குரலில் பேச
”கேட்கலை சத்தமா சொல்லு”
“இல்லை நான் வரலை” என சத்தமாகச் சொல்ல அவனோ முறைத்தான்
”ஒழுங்கா போய் வண்டியில உட்காரு, காலையிலயே என்னை கோபப்படுத்தி பார்க்காத, பெரிய அல்லிராணி நீ உன் பேச்சு இங்க எடுபடாது, புருஷன் கூப்பிட்டா கோயிலுக்கு என்ன சுடுகாட்டுக்கு கூட வரனும் புரியுதா” என கத்த அவளோ சரியென்று சொல்லிவிட்டு வெளியே செல்ல தாமரையோ
”அவளை மட்டும் கூட்டிட்டு போன எப்படி பாரு கீர்த்தனா முகம் வாடிப் போச்சி தேவா”
“நான் போறதே அவளை கோயிலை விட்டுட்டு வர்றதுக்குத்தான், அப்படியே அவள் காணாம போகட்டும்” என சொல்ல தாஸ் பயந்தான். உடனே வீட்டை விட்டு வெளியே ஓட சிரித்தான் தேவா.
”சும்மாயிருடா நீ வேற” என தாமரை சொல்ல
”அப்படியில்லை தாமரை கோயிலுக்கு போயிட்டு அப்படியே அந்த ஹாஸ்டல் என்னாச்சின்னு தெரியலை, அதான் இவளை கூட்டிட்டு போய் காலேஜ்ல விட்டுட்டு வந்துடலாம்னு இருக்கேன், அப்பா வேற அதையே சொல்லிட்டு இருந்தாரு ஒண்ணு