பல விதமாக சைகை செய்தும் அவள் புரிந்துக் கொள்ளாமல் போகவே அவளது கையை பிடித்து வெளியே இழுக்க ஆரம்பிக்க அதற்குள் அங்கு வந்தான் தேவா
”ஏண்டா அவள் கையை இழுக்கற போ” என சொல்ல அவளோ
”என்னாச்சி” என கேட்க
“ம் ஒண்ணுமில்லை நீ என் கூட வர்றது அவனுக்குப் பிடிக்கலை” என சொல்ல தாஸ் உடனே இல்லை என தலையாட்ட
”பாரு பிடிக்கலைன்னு தலையாட்டறான்” என சொல்ல அவளோ சிரித்தாள்
”இல்லை வேற ஏதோ இருக்கு, நீங்க என்னை விட்டுட்டு வரத்தான் இப்ப கூட்டிட்டு போறீங்களா”
“ஆமாம்” என சொல்ல
”எதுக்கு நானே போயிடறேன்” என சொல்லி இறங்க முற்பட்டவளை தள்ளிக் கொண்டு ஏறி அமர்ந்து கதவை சாத்தினான்
”ஆமாம் உன்கூட எப்பவுமே 2 பார்டிகார்டுங்க வருவாங்களே எங்க அவனுங்க”
“தாத்தா கிட்ட இருக்காங்க” என சொல்ல தாஸ் வந்தான்
”யாரு கார் ஓட்டறது” என அவன் சைகை செய்ய
”நீயே ஓட்டு” என சொல்ல ரெண்டு பேரையும் மாறி மாறி பார்த்துவிட்டு டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்துக் கொண்டு வண்டியை கோயிலுக்கு விட்டான்.
தேவாவோ சரண்யாவிடம்