”இதப்பாரு உனக்கு தேவா வேணும்னா அவன்ட்ட காதல் பண்ணு, அதை விட்டுட்டு இப்படி அவன் திட்டறதுக்கு அழுதுக்கிட்டு இருந்தா அவனுக்கென்ன கீர்த்தனா இருக்கறவரைக்கும் உன்னை அவன் தேடவே மாட்டான்.”
“இப்ப நான் என்ன செய்றது”
“படிச்ச பொண்ணு நான் சொல்லியா உனக்குத் தெரியனும், 5 மாசத்துக்கு உன்கூடதான் நிறைய நேரம் அவன் இருக்கப் போறான். எப்படியாவது அவன் மனசுல நீ இடம்பிடிச்சிட்டன்னா போதும் அப்புறம் தானாவே தேவா உன்னை விரும்பி ஏத்துக்குவான்”
“என்னால முடியுமா அவர் என் மேல வெறுப்பால இருக்காரு”
“இருக்கட்டுமே ஏன் அவனை கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி கஷ்டப்பட்டு அவன் வெறுப்பை விருப்பமா மாத்திக்கோ வேற வழியில்லை, உன்னால முடியலைன்னா காலையில சொல்லு நானே உன்னை உன் தாத்தா கிட்ட அனுப்பி வைக்கிறேன் இல்லை தேவாவோடதான் வாழ்வேன்னு நினைச்சா கஷ்டப்பட்டாவது அவன் மனசில இடம்பிடிக்கற வழியை பாரு புரியுதா” என சொல்ல அவளும் அதற்குச் சரியென்றாள்.
மனதில்
”இருக்கும் 5 மாதங்களில் என்னவெல்லாம் செய்யலாம் எப்படி தேவாவின் மனதில் இடம் பிடிக்கலாம்” என பல திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்தாள் சரண்யா.
சரண்யாவின் திட்டங்கள் நிறைவேறுமா? தேவா சரண்யாவின் திட்டத்தில் இருந்து தப்பிப்பானா?? சரண்யா தேவாவின் மனதில் இடம்பிடிப்பாளா??? சரண்யாவின் போராட்டத்தில் கீர்த்தனா பலியாவாளா????
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்...