பார்த்தாள்
”உனக்கென்ன படம் பாரு”
“ஏன் அவளை திட்டறீங்க”
“படத்தை பார்க்காம என்னையே பார்த்தா அதான் திட்டிட்டேன்”
“வீட்ல நாலு சுவத்தில பேசுங்க இங்க வேணாம் வெளிய வேணாம்”
“சரி போதுமா”
“நாளைக்கு வேலைக்கு ஒண்ணா போறீங்கள்ல அங்கயும் அவளை இதுபோல சண்டை பிடிக்காம இருங்க”
“இதப்பாரு கீர்த்தனா யாருக்கு என்ன செய்யனும்னு எனக்கு தெரியும் புரியுதா இப்ப ஒரு முத்தம் கொடுக்கவா”
“அய்யோ இங்கயா எல்லாரும் இருக்காங்க”
“நான் தரேன் வா”
“சரண்யா இருக்கா”
“அவள் கிடக்கறா நீ வா” என அவளை இழுத்து கன்னத்தில் முத்தம் வைக்க அவள் சிணுங்கி விலக அதை ரசித்து அவளிடம் சில்மிஷம் செய்தான் தேவா.
சரண்யாவோ அவர்களது இந்த செயல்களால் மனம் உடைந்து அங்கிருந்து எழுந்து செல்லவும் முடியாமல் அங்கேயே இருக்கவும் முடியாமல் கஷ்டப்பட்டாள். அவளது அந்த வேதனை அவள் மனதில் பெரும் புயலை உருவாக்கியது. தன் கண் முன்னே வேண்டுமென்றே இருவரும் அப்படியிருப்பதைக்கண்டு தாங்க முடியாமல் போனது