”என்ன பண்ண” என சைகையில் கேட்க
”நானா நான் எதுவும் பண்ணலை, அவள் அழுதா அழுகாயிருப்பா அதான் அவளை 4 வார்த்தை சொல்லி அழ வைச்சி வேடிக்கைப் பார்க்கறேன்” என சொல்ல தாஸோ
”வேணாம் அவளை அழ வைக்காத எனக்கு கோபம் வரும் உன்னை அடிச்சிடுவேன்” என சைகை செய்ய
”அடிப்பியா வாடா வந்து அடி வா”
”அவளை அழ வைக்காத இல்லை அவ்ளோதான்” என சைகையில் மிரட்ட தேவாவோ
”ஏய் போடா இப்ப பாரு உன் முன்னாடியே என்ன செய்றேன்னு” என வேண்டுமென்றே அவளது இடுப்பில் கையை வைத்து நறுக்கென கிள்ளிவிட அவள் ஆ வென அலறி அழ ஆரம்பிக்கவே தாஸ் கடுப்பாகி தேவாவின் சட்டையை பிடிக்க இருவரும் காருக்குள் சண்டை போடவே சரண்யா தடுத்து நிப்பாட்டினாள்
தாஸும் அமைதியாகி தன் சட்டையை சரி செய்துக் கொண்டு தேவாவை பார்த்து முறைத்துவிட்டு காரை ஓட்டலானான். தேவாவோ தன் சட்டையை சரிசெய்துவிட்டு சரண்யாவைப் பார்த்தான்
”என்னை அடிக்க ஆளை செட் பண்றியா நீ உன்னை” என அவளிடம் கத்த
”சாரி சாரி” என்றாள்.
அதற்குள் கோயில் வரவும் இறங்கிய மூவரும் தாஸ் கொடுத்த பூவை தலையில் வைத்துக் கொண்ட சரண்யாவும் தேவா பக்கம் வர அவனோ முறைக்க சட்டென தாஸ் பக்கம் சென்று நின்றுக் கொள்ளவும் இருவரையும் ஒரு சேர முறைத்துவிட்டு கோபமாக கோயிலுக்குள் நுழைந்தான் தேவா.