அவனைக் கண்டதும் மெய்மறந்தாள். குளித்து விட்டு ஈர டவலுடன் வந்து நின்றவனைக் கண்டு இவளுக்கு வேர்த்துவிட்டது. எழுந்து நின்று அவனையே பார்க்க அவனோ
”அவ்ளோ திட்டினேனே சுரனை இல்லை உனக்கு, இங்க வந்து உட்கார்ந்திருக்க நான் எல்லாம் உன்னை கோயிலுக்கு கூட்டிட்டு போக மாட்டேன் புரியுதா புரியலையா” என கத்த அவளுக்கு காதில் எதுவும் விழவில்லை. அவனையே ஆசையாக பார்க்க அவளின் பார்வையைக் கண்டு திடுக்கிட்டவன் அவளது தோளை தொட்டு உலுக்கினான்
”ஏய் என்ன பார்க்கற?”
“உங்களைத்தான்” என்றாள் ஆசையாக
”நான் பேசறது கேட்டிச்சா இல்லையா”
என கேட்க அவள் எல்லா பக்கமும் தலையாட்ட
”எங்க பேசு” என அவன் கேட்க
”நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என அவள் சொல்லவே அவனுக்கு கூச்சமாகிப் போனது. உடனே திரும்பி கீர்த்தனாவின் முகத்தைப் பார்க்க அவளோ கோபமாக அவனையே பாரக்க
”என்னை ஏன் கோபமா பார்க்கற”
“உங்களை யாரு இப்படியே அவள் முன்னாடி வந்து நிக்கச் சொன்னது” என கேட்க அவனோ சரண்யாவை முறைப்பாக பார்த்துவிட்டு உடனே அறைக்குள் செல்ல கீர்த்தனா கிச்சனுக்கு செல்லவும் சரண்யா தேவாவை தேடிச் சென்றாள். அங்கு அவன் உடை மாற்றி சட்டையின் பட்டனை போட ஆரம்பிக்க அந்நேரம் வந்து நின்றாள் சரண்யா
”என்ன வேணும்” என கேட்க அவள் பதிலே சொல்லாமல் அவனது சட்டை பட்டனை அவளே போட ஆரம்பிக்க அவன் தடுத்தான்