கண்டு எதுவும் பேசாமல் காலார நடக்க ஆரம்பித்தான் வைத்தி. எங்கு சென்றான் என யாருக்கும் தெரியவில்லை
2 வருடம் கழித்து திரும்பி வந்த வைத்தியோ தனது தந்தையின் உடல்நிலை மோசமாக இருப்பதைக் கண்டு அதிர்ந்தான்.
சுந்தரமோ வைத்தியின் வீட்டிற்கு பக்கத்து வீட்டிலேயே தாமரையுடன் குடும்பம் நடத்தலானான். அப்போதே தாமரைக்கு ஒரு குழந்தையிருக்கவும் அவளிடம் பேச முடியாமல் அவளை பார்க்காமல் இருக்க முடியாமலும் வேதனையில் இருந்த மகனை காப்பாற்ற எண்ணி விஜயன் எப்படியோ தன் உடல்நிலை மோசமாவதை காரணம் காட்டியும் சுந்தரத்தின் பொறாமை துரோகத்திற்கு எதிராக நீயும் வாழ்ந்துக் காட்ட வேண்டும் என கட்டாயப்படுத்தி திருமணமும் செய்து வைத்துவிட்டு சில நாட்களிலேயே இறந்தும் விட மொத்த பொறுப்பும் வைத்தியின் மீது விழுந்தது.
தந்தையின் மறைவிற்கு சரியான வைத்தியம் இல்லை என்றும் சுந்தரம் டாக்டர் என்றாலும் அவன் செய்த துரோகத்திற்காகவே தன் தந்தை அவனிடம் வைத்தியம் பார்க்கவில்லை என்று அறிந்த வைத்தியோ தான் 2 வருடங்களாக எங்கோ சென்று கற்று வந்த நாட்டு வைத்தியத்தை அந்த ஊரில் இலவசமாக மக்களுக்கு வழங்கினான்.
காலங்கள் சென்றாலும் வைத்தி தினமும் தாமரையை பார்த்துக் கொண்டே இருந்தான். பேசவில்லை என்றாலும் அவர்களின் பார்வைகளே பேசிக் கொண்டன. இருவரின் மனவேதனையைக் கண்டு குளிர்காய்ந்த சுந்தரமோ பெரிய ஆஸ்பிட்டல் கட்டி வைத்தியம் செய்து ஊருக்குள் பேரும் புகழும் சம்பாதித்தான்
தேவாவின் செயலால் தாமரையின் நிலைமை இனி என்னவாகும்? சுந்தரம் தன் மனைவியின் மனதை புரிந்துக் கொள்வாரா? தான் செய்த துரோகத்தை உணர்வாறா? பார்க்கலாம்
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்...