“கண்டிப்பா வரேன்”
“அப்புறம் கவனம் நீ எதையும் கொண்டார வேணாம், இந்தா நானே சேலையை கொண்டாந்திருக்கேன். இதை கட்டிக்கிட்டு வா போதும் சரியா”
“சுந்தரத்தை நினைச்சா பயமா இருக்கு”
“நான் பார்த்துக்கறேன்”
“ஊரே அவனுக்கு உதவியா இருக்கே”
”நான் இருக்கேன் ராத்திரி வந்துடு போதும், பயந்துட்டு வராம இருந்திடாத கண்டிப்பா நீ வரனும் இல்லைன்னா அவ்ளோதான்” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட அவன் தந்த சேலையுடன் வீட்டுக்குள் வந்தவளை மணி கண்டு அவளிடம் ஆத்திரத்தில் கத்தி திட்டி அடித்து அவள் மனதை மாற்ற முயன்றும் முடியாமல் போகவே இறுதியில் விஷம் குடிப்பது வரை பேசவும் அவள் பயந்துவிட்டாள்.
அவளின் பயத்தை பலமாக எடுத்துக் கொண்டவர் அவளை உருட்டி மிரட்டி எப்படியோ அவள் ஓடிவிடாமல் பார்த்துக் கொண்டார். அவளும் பயத்தில் என்ன செய்வது என்று வேறு வழியில்லாமல் சுந்தரம்தான் என முடிவெடுத்தாள்.
உடனே மணியும் அவளை தெரிந்தவர்கள் வீட்டில் தங்க வைத்துவிட்டார். அது தெரியாத வைத்தியோ இரவு நேரம் வந்தும் அவள் வராமல் போகவே விடியும் வரை காத்திருந்து ஏமாற்றத்துடன் மணியிடமே சண்டையிட செல்ல அவரோ இம்முறை அவனை திட்டி விரட்டிவிட்டார்.
கோயிலில் அவசரமாக அன்றே திருமணம் செய்துவிட்டார், அடுத்த நாள்தானே கல்யாணம் அன்று நிப்பாட்டலாம் என நினைத்தவனுக்கு பெருத்த ஏமாற்றம். கல்யாண கோலத்தில் வைத்தியின் முன் நின்றான் சுந்தரம், அழுதுக் கொண்டு தலைகுனிந்திருந்த தாமரையைக்