(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

சென்று அமர்ந்தாள்.

   

அவள் சென்றதும் நெஞ்சில் கைவைத்து பெருமூச்சு வாங்கியவன்

   

”யப்பா தப்பிச்சிட்டேன் விட்டிருந்தா என்னை இன்னிக்கு ஒரு வழி பண்ணியிருப்பா போலயே ம்ஹூம் தேவா ஏதோ புது திட்டம் போட்டிருக்கா, தப்புடா தப்பு செய்யாத ஏதாவது நீ செஞ்சி அதனால அவள் கர்ப்பமானா அவ்ளோதான் நீ ரொம்ப கஷ்டப்படுவ ஜாக்கிரதை” என அவனது மனசாட்சி எச்சரிக்கை அலாரம் அடிக்கவே அவன் உடனே தன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு வெளியே வந்தான். அங்கு இரு பெண்களும் தயாராக இருப்பதைக் கண்டு திடுக்கிட்டவன்

   

”இவளுங்களோட நான் கோயிலுக்கு போனா அவ்ளோதான் என்ன செய்றது இப்ப” என யோசித்தவன் உடனே

   

”தாமரை தாமரை”

   

“என்னப்பா”

   

”நீயும் வா கோயிலுக்கு போலாம்” என சொல்ல

   

”நான் வரலை நீங்க போங்க”

   

“அட வா தாமரை, எப்ப பாரு அடுப்படியில கிடப்ப வா வா” என அவளை அழைத்துக் கொண்டு முதல் ஆளாக வெளியே செல்லவும் 2 பெண்களும் மாறி மாறி பார்த்துவிட்டு உடனே வெளியே ஓடினார்கள், தெருவிற்கு வரவும் தாஸ் ரெடியாக இருந்தான். தேவா தாமரையுடன் வர பின்னாடி 2 பெண்களும் ஓடி வர அவனுக்கு வியப்பாக இருந்தது

   

”என்ன இது” என அவன் சைகை செய்ய தேவா திரும்பிப் பார்த்தான்

   

”நீங்க எங்க வர்றீங்க” என இரு பெண்களிடம் பார்த்து கேட்க

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.