இங்கிருந்து” என விரட்ட அவளோ சிரித்துக் கொண்டே
”என் மேல இருக்கற கோபத்தை டிபன் மேல காட்டாதீங்க, இதை பாட்டிதான் கொடுத்து விட்டாங்க”
“அப்படின்னா நீயே சாப்பிட்டுக்க எனக்கு தேவையானதை செய்ய என் பொண்டாட்டி இருக்கா”
“நானும் உங்க பொண்டாட்டிதானே” என கேட்க அவன் உடனே அவளிடம் சந்தேகமாக
”என்ன இது புது நாடகமா எதுவும் முடியலைன்னு கடைசியில இப்படி நீ இறங்கிட்டியா” என கேட்க
”சே சே அப்படியில்லை. நீங்கதானே சொல்வீங்க குடும்ப பொண்ணுன்னா இப்படி இருக்கனும் அப்படி இருக்கனும்னு அதான் நானும் ட்ரை பண்றேன்”
“ம்ஹூம் உன்னைப் பார்த்தா எனக்கு சுத்தமா நம்பிக்கை வரலையே”
“நம்பிக்கை வரனும்னா நான் என்ன செய்யனும்னு சொல்லுங்க செய்றேன்”
“அப்படியா அவ்ளோ நல்லவளா நீ அப்ப நல்லா கேளு என் கிட்டயே வராதே”
“அது என்னால முடியாதே எனக்கு நீங்க வேணும், நீங்க மட்டும்தான் என்னோட உலகம்” என அவள் சொல்லிச் சிரிக்கவும் அவள் மீது கோபமாக பேச முயல தாஸ் தடுத்தான்.
”என்னடா நீ” என கேட்க அவனோ அவளை திட்டாத என சைகை செய்ய அவனோ
”கீர்த்தனா உன் தங்கச்சி, அவள் வாழ்க்கையை பறிக்க பார்க்கிறா இந்த சரண்யா, நீ என்னடான்னா அவளுக்கு சப்போர்ட் பண்ற” என கேட்க அவனோ இரு பெண்களையும் மாறி மாறிப் பார்த்தான். பின்பு தேவாவை மட்டும் எழுப்பி