”கீர்த்தனா அமைதியா உட்காரு இந்த கோபம் வேணாம் உட்காரு” என சரண்யா சொல்ல தேவாவோ
”வாங்க போலாம்” என சொல்லி எழுந்து வேகமாக வெளியே செல்ல அடுத்து இருவரும் பின்னாடியே வந்து வண்டியில் ஏறிக்கொள்ள கார் வீட்டை அடைந்தது. வீட்டிற்குள் சென்றதும் குழப்பத்துடன் இருந்த தேவாவிடம் தாஸ் வந்தான் என்ன என சைகை செய்ய
”ஒரே குழப்பமா இருக்கு எனக்கு, என்னால தியானமே செய்ய முடியலை கண்ணை மூடினா சரண்யா வர்றா” என சொல்ல அதைக்கேட்ட கீர்த்தனாவோ
”நான் வரலையா” என ஆசையாகக் கேட்க
”நானே அவள் வந்ததால தியானம் கெட்டுப்போச்சின்னு கோபத்தில இருக்கேன். இதுல நீ வேற” என கத்தவே அதிர்ந்தாள் கீர்த்தனா
”ஏன் இப்படி கத்தறீங்க” என அவள் அமைதியாக கேட்க அவன் உடனே கோபத்தை குறைத்துவிட்டு சோபாவில் அமர்ந்தவன் அவளை வா என அழைக்க கீர்த்தனா அவன் பக்கம் சென்று அமர்ந்தாள்
”அது கோபப்படலை தியானம் செய்ய முடியலைல்ல அதான் கொஞ்சம் டென்ஷனாயிட்டேன் சரியா”
“ம்”
“டிபன் கொண்டா” என சொல்ல உடனே சரண்யா டிபன் தட்டுடன் வந்து அவன் பக்கம் அமர்ந்து அவனிடம் நீட்டினாள்
”இந்தாங்க” என்றாள் சிரித்தபடியே
”உன்னாலதான் என் தியானம் கெட்டுப் போச்சி, இதுல நீ டிபன் கொண்டு வர்றியா போ