(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

“அசிங்கமா நடந்துக்காத”

   

“என் புருஷன்கிட்டதானே நான் இப்படி நடந்துக்கறேன்”

   

“ஓ உரிமை பாராட்டறியாக்கும் நான் நினைச்சா உனக்கு உடனே டைவர்ஸ் கொடுத்துடுவேன்”

   

”சரி அப்படியே செய்ங்க எப்படி செஞ்சாலும் 1 வருஷம் ஆகும் கோர்ட் டைவர்ஸ் தரனும்னா தெரியுமா”

   

“ஊருக்குள்ள பஞ்சாயத்து வைச்சன்னு வையேன் காசு வெட்டி தாலி அறுத்தா ஒரு மணி நேரத்தில டைவர்ஸ்தாண்டி” என சொல்லிவிட்டு எழுந்து நின்றான். அவளோ படுக்கையில் படுத்தபடியே அவனையே ஆசையாக பார்க்க அவளின் ஆசை பார்வையில் சிரிக்கும் சிரிப்பில் தேவா சற்றுத் தடுமாறினாலும்

   

”உன்னைப் பார்க்கறப்ப என் பொண்டாட்டிங்கற எண்ணம் வரலை இப்படியெல்லாம் பார்த்து வைக்காத புரியுதா”

   

“புரியுது நல்லாவே புரியுது ஆனா எனக்கு உங்களை பார்க்க பார்க்க ஆசையா இருக்கு, அதுலயும் நீங்க வெறும் டவலோட என் முன்னாடி குளிச்சிட்டு வந்து நின்னப்ப எனக்கு காய்ச்சலே அடிச்சிடுச்சி”

   

“சீ வாயை மூடு ஆம்பளைங்கதான் இப்படியெல்லாம் பேசி வைப்பாங்க நீ உல்ட்டாவா பேசற”

   

“ஓ அப்படியா”

   

“ஆமாம் எழுந்து போ” என சொல்ல அவளும் மெல்ல எழுந்து அவன் முன் நின்று வெட்கப்பட்டு சிரித்துவிட்டு மெதுவாக அந்த அறையை விட்டு வெளியேறி சோபாவிற்கு 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.