கொள்ளவில்லையானாலும் உள்ளுக்குள் பனிப்போரே நடந்துக் கொண்டிருந்தது அது தெரியாமல் தேவாவும் வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை என நினைத்துக் கொண்டு நிம்மதியாக காலத்தை ஓட்டினான்.
ஒரு பக்கம் ஹாஸ்டல் வேகமாக கட்ட ஆரம்பிக்க இங்கு தேவாவின் வீடு இப்போதுதான் கட்ட ஆரம்பமாகிறது.
சரண்யா அனைவருக்கும் டிபன் தந்துவிட்டு கேரியருடன் ஸ்கூட்டியில் ஹாஸ்டல் கட்டும் இடத்திற்குச் சென்றுவிட கீர்த்தனா வீட்டை பூட்டி விட்டு எதிரில் இருந்த காலி மனைக்கு கணவருடன் வந்து அங்கிருந்த வேலையாட்களை வேலை வாங்கலானாள். மனைவியிடம் வீடு கட்டும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு தாஸும் தேவாவும் சூப்பர்வைசர்களாக மாறி தங்கள் கடமைகளை நிறைவேற்றினார்கள்.
தாமரை மற்றும் வைத்தியின் இழப்பு தேவாவின் மனதை மாற்றிவிட்டது இதனால் கீர்த்தனா மற்றும் சரண்யா வாழ்வில் வசந்தம் வீசுமோ? அல்லது யார் வாழ்க்கை புயலாக மாறுமோ? பொறுத்திருந்து பார்ப்போம்
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்...