”பாட்டி தாத்தா எங்க?”
“வெளியூர் போயிருக்காரு”
“எப்ப போனாரு?”
“போய் 3 நாள் ஆகுது”
“எப்ப வருவாரு?”
“1 வாரம் கழிச்சித்தான்”
”என்ன விசயம்”
“ஒவ்வொரு கிராமமா நாட்டு மருத்துவத்துக்கான கேம்ப் போடறாங்களாம் அதுக்கு இவர் தலைமை தாங்கறாரு அதான்” என சொல்ல அவனோ உடனே வீட்டை விட்டு வெளியேறி தாத்தாவிற்கு போன் செய்து தாமரையின் நிலைமை பற்றி கூற அவர் உடனே கிளம்பினார்.
அவர் வருவதற்குள் விடிந்தே விட்டது.
சுந்தரத்தின் வீட்டிலேயே தேவா கீர்த்தனா சரண்யா தங்கிவிட்டார்கள்.
மூவரும் கவலையாக பாட்டி பக்கத்திலேயே இருக்கவே சுந்தரம் அதைப்பார்த்து வியந்து தேவாவிடம்
”தேவா நீ கிளம்புப்பா நான் அவளை பார்த்துக்கிறேன்”
“போதும் நீ பார்த்துக்கிட்டது, நீ மட்டும் அமைதியா வழிவிட்டிருந்தா இந்நேரம் தாமரை தான் ஆசைப்பட்டவனை கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்ந்திருப்பா, நீ குறுக்க வந்து அவள் வாழ்க்கையை கெடுத்துட்டியே இன்னிக்கு வரைக்கும் குற்ற உணர்ச்சியிலயே அவள்