“அது உன் வயசு அப்படி அதான்” என சொல்ல அவளோ
”சாரி நீங்க போங்க நான் தூங்கிக்கறேன்”
“சரி வா எழுந்து வா”
“எங்க?”
“வா கீர்த்தனா இருக்காள்ல அவள் கூட படுத்துக்க”
“அப்ப நீங்க?”
“நானும்தான்”
“3 பேரும் எப்படி ஒரே கட்டில்ல வேணாம் நான் வரலை நீங்கன்னா ஜாலியா இருப்பீங்க நான் எதுக்கு குறுக்க”
“சீ வா எனக்கு இருக்கற உடம்பு அசதியில அந்த எண்ணமே எனக்கு இல்லை வா வா” என அவளை இழுத்துக் கொண்டு தன் அறைக்கு வந்தான். சரண்யாவை கண்டதும் கீர்த்தனாவிற்கு சந்தேகம் வர
”ஓவரா யோசிக்காத கீர்த்தனா, தனியா தூங்க பயமாம் உன் கூட படுக்க வைச்சிக்க” என செல்லிவிட்டு அவன் படுத்துக் கொள்ள அவன் இரு பக்கமும் இரு பெண்கள் படுக்கவே அதிர்ந்தான்
”சரண்யா நீ கீர்த்தனா பக்கத்தில படுத்துக்க” என சொல்ல அவளும் எழுந்தாள் கீர்த்தனா தடுத்தாள்
”இருக்கட்டும் அவள் அங்கயே படுக்கட்டும்” என சொல்ல சரண்யாவும் படுத்துவிட்டாள். 3