அவள் கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டான். அதில் அவள் சுருண்டு தரையில் விழவும் அவளை கைபிடித்து எழுப்பி நிற்க வைத்தவன் கைலாசத்தை பார்த்து
”வாங்க போலாம்” என்றான் அவரும் சரியென தலையாட்டிவிட்டு தாத்தாவிடம்
”நாங்க கிளம்பறோம் இனி இங்க நிக்கறதால எதுவும் ஆயிடாது, தேவா தெளிவா இருக்கான். நீங்க டைவர்ஸ் பேப்பர்ஸ் அனுப்பினா கண்டிப்பா அவன் கையெழுத்துப் போடுவான்”
“ஆமாம் அவன் கண்டிப்பா போடுவான் ஆனா அவன் போடவேக்கூடாது ஒண்ணு சரண்யா அவன் கூட வாழனும் இல்லை அவள் இஷ்டப்படி வாழ நான் விடமாட்டேன்” என தாத்தா சொல்லவே அனைவரும் அதிர்ந்தார்கள். அதில் தாத்தாவின் கண்கள் தாஸையே பார்த்தன அவனோ தைரியமாக நின்றுக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்துச் சிரித்தவர் சரண்யாவிடம் வந்தார்
”சரண்யா ஒண்ணு நீ தேவா கூட வாழனும் இல்லையா நான் சொல்ற பையனை நீ கல்யாணம் பண்ணிக்கனும்” என சொல்ல அவளோ
”ஓ நீங்க ஆளை பார்த்துட்டீங்களா”
“ஆமாம்”
“சரி எனக்கென்ன பண்ணிக்கிறேன் அப்ப இந்தச் சொத்து எனக்கு சேரும்ல”
“கண்டிப்பா சேரும் ஆனா உன் புருஷனுக்குத்தான் நான் தருவேன் நீ அவன்கூட பார்ட்னரா இருக்கலாம்” என சொல்ல அவளும் அதற்கு ஒப்புக் கொண்டாள்.
அவளை விட்டு கைலாசத்திடம் வந்தார்
”டைவர்ஸ் பேப்பர்ஸ் ரெடி பண்ணித்தரேன் ஆனா ஒரு கன்டிஷன் அந்த பேப்பர்ல தேவா