(Reading time: 49 - 97 minutes)

 

ன்று ரகுராமும் அதையே செய்ய, ஒரு நொடி ரகு ஸ்ரீராமின் சாயலில் இருப்பதுபோல் தோன்றியது அவளுக்கு..தன் எண்ணத்தை கண்டு திடுகிட்டு அவள் நிமிர, ரகு நிறுத்திய காரை மீண்டும் செலுத்தி கொண்டு  இருந்தான்...

" உண்மையிலே ரகு ஸ்பரிசித்தானா ? " என்று அவள் குழம்பினாள். அதே நேரம், அவன்  சொன்ன அறிவுரையையும் அசைபோட்டபடி அமர்ந்திருந்தாள் ஜானகி ..

ஆழ்ந்த யோசனையில் இருந்தவளை, அவனின் குரல் கலைத்தது.

" இறங்கு இறங்கு "

" எங்க ரகு ?"

" ஷாப்பிங் "

"  ஷாப்பிங் ஆ ? யாருக்கு "

" சொல்லுறேன் உள்ளே வா .... "

" இந்த  சுடிதார் எப்படி இருக்கு ஜானகி ? "

" வாவ் சூப்பர் ஆ இருக்கு ரகு .. எப்படி இதை சூஸ் பண்ணிங்க? "

" நான் எங்க சூஸ் பண்ணேன் ..நம்ம வீட்டு குட்டி பிசாசு தான் நேத்து நான் கார்ல கூட்டிட்டு போகும்போது ஷோ கேஸ் பொம்மைக்கு போட்டிருந்த அந்த சுடிதாரை வாங்கி கொடுன்னு ஒரே அடம் "

" நான் தான் பந்தா பண்ணேன் முடியாதுன்னு "

" ஏன் "

" இன்னைக்கு சர்ப்ரைஸா கொடுக்கலாம்னு தான் .... "

" சூப்பர் ரகு " என்று அவள் சொல்லவும்..கடைகாரரிடம் திரும்பி அதே மாதிரி 4 சுடிதார் எடுக்க சொன்னான்.

" எதுக்கு ரகு 4 ? "

" சுபாவுக்கு நித்யாவுக்கு மீரா அண்ணிக்கு அண்ட் ஜானுவுக்கு ? "

" எனக்கெதுக்கு ரகு ? எனக்கு வேணாமே  "

" அதெலாம் நீ சுபா கிட்ட பேசிக்கோ " என்றவன் அவள் அடம்பிடித்ததை கவனிக்காமல்  நினைத்தபடி வாங்கி முடித்தான் . அதன் பிறகு அவளை கோவிலுக்கு அழைத்து சென்றான். அவன் எதிர்பார்த்தது போல கோவிலில் இருந்து திரும்பும்போது  நிம்மதியாய் உணர்ந்தாள் ஜானகி ....

றுநாள்,

" மீரா "

" சொல்லுங்க ஆன்டி "

" உன்கிட்ட பேசணும் " என்றார் அபிராமி.

" சொல்லுங்க "

எனும்போதே அங்கிருந்த ரகுவின் செல்போன் மீண்டும் சிணுங்கியது ...

" அஞ்சாறு தடவை அடிச்சிருச்சு .. எங்க போனான் இந்த பையன் ? மீரா நீயே அதை யாருன்னு கேளும்மா "

" நான் கிச்சன்ல  சின்ன வேலை இருக்கு முடிச்சிட்டு வரேன்" என்றார்.

" சரி ஆன்டி "

" ஹெலோ "

" ஹெலோ ரகு நான் ஜானு "

" ஜானகியா ? சாரி நான் மீரா பேசறேன் "

" மீரா ...  உங்களுக்கு இப்போ ஸ்ப்ரைன் சரியாச்சா ? ரகு   இல்லையா ? "

" ம்ம் நான் இப்போ நல்ல இருக்கேன் ஜானகி ...நீங்க ? ரகு குளிக்கிறார் போல "

" ம்ம்ம் நானும் நல்ல இருக்கேன் .. குளிக்கிறாரா? சரி நான் கால் பண்ணேன்னு  சொல்லுங்க ... தேங்க்ஸ் "

" ஹான் சரி .. ஜானகி ....."

" ம்ம்ம்ம்ம்ம்ம் ?"

" ஐ எம் சாரி   "

" எதுக்கு ? "

" இல்ல முதல் தடவை  உங்களை பார்த்தபோது சுபா உங்களை அண்ணின்னு கூப்பிடுறதை வெச்சு  நீங்க கிருஷ்ணாவை கட்டிக்க போறிங்கன்னு நெனச்சேன் "

கொஞ்சம் அதிர்ச்சி அடைந்த ஜானகி , ஹெலோ ஹெலோ என்று மீரா அழைக்கவும் , சுதாரித்து கொண்டு அடுத்த அதிர்ச்சிக்கு தயார் ஆனாள்.

" யா இருக்கேன் சொல்லுங்க.. பரவாயில்ல மீரா ... இதுல என்ன இருக்கு "

" என்ன இருக்கா ?  நல்ல வேளை இது உங்க ரகுவுக்கு தெரியாது ... தெரிஞ்சிருந்த ரொம்ப கோபப்பட்டிருப்பார் "

" ரகுவா ???? "

" ஆமா .... கிருஷ்ணாதான் சொன்னார் ...ஜானகியை நான் விரும்பல ... ரகுதான் விரும்புறார்னு "

"..............????????"

" ஹெலோ ...ஹெலோ .....ஜானகி இருக்கிங்களா ? "

" ம்ம்ம்ம் "

" என்னாச்சு .. இல்ல சிக்னல் சரி  இல்ல.. நான் மறுபடி கூப்பிடுறேன் ..." என்று அதிர்ச்சியுடன் போனை வைத்தாள் ஜானகி.

( நித்யா ஆரம்பிக்கலாம்னு சொன்ன அடுத்த ப்ளான் என்னபுவனேஸ்வரியை மீரா மீட் பண்ணுவாங்களா? அவங்க யாரு ? அர்ஜுன் கண்ட கனவு நிஜம் ஆகுமா ? சந்திரப்ரகாஷ் சார் எப்போ அபிராமி கிட்டே பேசுவார் ? அல்லது பேசியாச்சா ? அபிராமி மீரா கிட்ட என்ன பேச போறாங்க ?

மனிதனின் மனம் ஒரு குரங்கு ..சரியாதான் சொன்னாங்க.. எப்பவுமே ஒரு விஷயத்தை தூரத்தில் வெச்சு பார்க்கிறதுக்கும் சொந்த லைப் அனுபவிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு... ஒரு வேடிக்கையான உதாரணம் சொல்லவா ? பொதுவா இந்த காதல் சீரியல், காதல் படம் பார்க்குற அப்பா அம்மா  எல்லாம்  எப்போடா ஹீரோ ஹீரோயின்  சேருவாங்கனு டிவி முன்னாடி உட்கார்ந்து தவமா தவமிருப்பாங்க.. அதுவே அவங்க பிள்ளைங்க காதல் பண்ணா வெட்டவா குத்தாவானு கோபப்படுவாங்க... இப்போ இந்த அறுவை எதற்குனா ,

நம்ம ஜானுகுட்டிகாகத்தான் ..... இதுவரை ரகுராம் பாவம்... அந்த பொண்ணு யாருன்னு  கேட்டுகிட்டு இருந்த ஜானகிக்கு அவங்க கேள்வியின் பதில் கிடைச்சிருச்சு ... இப்போ அவங்க ரகுவின் தோழியா யோசிச்சு அவர் காதலை  ஏற்றுகொள்ள போறாங்களா ? அல்லது ஏற்காமல் கொல்ல போறாங்களா ? அடுத்த எபிசொட் சொல்றேன்  )

தொடரும்

Episode # 10

Episode # 12

{kunena_discuss:734}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.