அவனுக்கு வேண்டும் என்ற போது என்னை அச்சுறுத்தி பணிய வைப்பானா ...? பணக்கார வர்க்கத்திற்கு இது ஒன்றும் புதுசு இல்லையே கிஷோர்.... அவன் தகுதிக்கு அவன் அத்தனை அயோக்கிய தனம் செய்தான் என்றால் ஆதி அவனை காட்டிலும் எத்தனையோ மடங்கு பணம் படைத்தவன் ....என்றால் நான் அவனுக்கு பட்டு குஞ்சம் கட்டிய விளக்குமாறா .....?
என்ன சொல்வானாம் இவன் தாத்தனுக்கு..? அவன் சொல்வான் சொல்வதற்கு அவனுக்கு ஏது தடை..? என்னன்னவோ சொல்லி தானே என்னை உள்ளே கொண்டு வந்தான் ...ஏதேதோ சொல்லி என்னை வெளியே தள்ளுவது ஒன்றும் பெரிய காரியம் இல்லையே ...?
அவன் தள்ளாவிட்டாலும் நான் சென்று விடுவேனே ...போகவும் சொல்லாமல் இருக்க சொல்லவும் மனமில்லாமல் என்னை வார்த்தையால் வஞ்சிப்பான் அவன் ...அவன் ஏசும் சொற்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ிவாய வாழ்க ..நாதன் தாள் வாழ்க ...இமைபொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க...மனதை அமைதி படுத்தி பாட்டியை காண சென்றாள் மனோகரி.
என்னதான் ஆதியை அவள் தவறாக நினைத்த போதும் அவன் தனக்கு செய்த தீங்கின் பிரதிபலிப்பை தாத்தாவிடமோ, பாட்டியிடமோ ...முத்துவிடமோ வெளிபடுத்த அவளால் முடியவில்லை ….!