(Reading time: 11 - 22 minutes)

 

"துக்கு?"-என்றப்படி அவளை நெருங்கினான்.

"இப்போ எதுக்கு பக்கத்துல வரீங்க?"

"என் ரூம்!என் கால்!என் அம்மூ!நான் வருவேன்!"-அவள் சென்று சுவரோடு முட்டினாள்.

ஆதித்யா கைகளை அவளுக்கு அணையாக்கினான்.

"விடுங்க!"

"ம்.."-என்று திரும்பி இருந்த முகத்தை தன்பக்கமாய் திருப்பி அவளை உற்றுப்பார்த்தான்.

தன்னிச்சையாக அவள் முகம் தாழ்ந்தது.

மெல்ல அவளது கன்னத்தை தீண்டினான்.

சரியாக அந்நேரம் யாரோ கதவை தட்ட அவசர அவசரமாய் விலகினர்.

மது பதற்றத்தோடு சென்று கதவை திறந்தாள்.ஆர்யா தான்!!

"அப்பா கிடைச்சிட்டாராம்மா?"

"ஏன்டா நான் என்ன காணாமலா போயிட்டேன்?"-என்று உள்ளிருந்து குரல் வர எட்டி பார்த்தான்.

"நீங்க உள்ளே என்ன பண்றீங்க?"

"நான்...கு...குளிச்சிட்டு இருந்தேன்!"

"இப்போ தானே குளிச்சிங்க?"

"ரொம்ப பேசுற!என்ன விஷயம்!"

"அம்மா போன் ரொம்ப நேரமா அடிக்குது!"

"பிளடி போன்!"

"என்னப்பா?"

"எடுத்து பேச வேண்டியது தானே!"

"ஹாஸ்பிட்டல்ல இருந்து வருது...அதான் எடுக்கலை!நீங்க வாங்கம்மா!"-மது சரணை புன்னகையோடு பார்க்க அவன் முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டான்.ஒரு சிரிப்போடு நகர்ந்தாள் அவள்.

"அம்மூ!"

"கூப்பிட்டீங்களாப்பா?"-ஆர்யாவின் கழுத்தை அவனுக்கு வலிக்காதப்படி பற்றினான் சரண்.

"கேட்டுட்டல்ல..உன் ரத்தத்தை குடிச்சிடுவேன்!போய் அரியர் எக்ஸாம்க்கு படி போ!"-என்று அவனை அவனது அறைக்கு இழுத்து சென்றான்.

தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:877}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.