ஏய் வாலு... உன்னை காலையில் வெறட்டிவிட்டு படுக்க வெச்சிட்டு போனா யார் எங்க போனாங்கனு பார்த்துட்டு இருக்க?!! உன்னை என்ன செய்தா சரி படுவ?' என்று ரோஜா அவள் அருகில் வர கவின் சென்று மல்லிகாவை கட்டிக்கொண்டாள்.
மல்லிமா பாருங்க அவங்களை...' என்று அவள் சிணுங்கிகொண்டே புகார் கூற எல்லோரும் சிரித்தனர்.
மலர், கயல், சங்கு என்று மற்ற மூவரும் கூட இப்போது ஷ்ரவந்திகாவிடம் கலகலத்து உரையாடினார்கள்.
என்ன ராமா உன் பேர பிள்ளைகள் எங்க? இந்த வாலுங்க தான் இருக்கு? எல்லா பிள்ளைகளுக்கும் கல்யாணம் செய்துட்டல??' என்றார் அலமூ.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
வத்சலாவின் "காற்றினிலே வரும் கீதம்" - விறுவிறுப்பான காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
யாருக்குமே இன்னும் கல்யாணம் ஆகல மாமி... இதை பத்தி நாம அப்புறமா பேசலாமா மாமி... தப்பா எடுத்துக்காதீங்க...அப்புறம்...அம்மா எதிர்ல இதே கேள்விய கேட்டுடாதீங்க!! அதிர்ச்சியுடன் ராமனை ஏறிட்டார் அலமூ மாமி.
ஐந்து பெண்களும் இணைந்து செல்ஃவீ எடுத்துக்கொண்டிருந்தனர். வேக வேகமாய் சங்கமித்ரா அந்த போட்டோக்களை வாட்ஸ் ஆஃப் குரூப்பில் அனுப்பி விட்டு... நான் அனுப்பிட்டேனே!' என்று கூச்சல் போட்டாள். 'என்ன அனுப்பிட்ட?' என்று புதியவள் கேட்டதற்கு
நம்ம எடுத்த செல்ஃவீ ய எங்க 'பூச்சரம்' குரூப்ல போட்டுட்டேன்! இப்போ கால்ஸ் மட்டும் எப்படி வர போகுதுனு பாருங்க!' என்றாள் சங்கு.
அச்சசோ! ஏன் சங்கு இப்படி பண்ண? - மலர்விழி.
ஏன்?? என்ன ஆச்சு? - என்றாள் ஷ்ரவன் பதட்டமாய்.
பயப்படாதீங்க வந்திகா... அது எங்க குடும்பத்தோட குரூப் தான் பயப்படாதீங்க' என்றாள் சங்கு.
புரியலையே?? எல்லாரும் வீட்டுல தானே இருக்கீங்க... அப்புறம்?? நீங்க எல்லாரும் ஒரே வீட்டுல...அதாவது இதே வீட்டுல தான் இருக்கீங்களா? - ஷ்ரவன்
நாங்க கூட்டு குடும்பமா தனே கேட்கறீங்க?? ஆமா... நாங்க எல்லாரும் ஒன்னா தான் இருக்கோம்....எங்க தாத்தா.. பாட்டி... அப்பாஸ் அண்ட் அம்மாஸ்...நாங்க பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்...எல்லாரும் ஒரே வீட்டுல தான்... இங்க இதே வீட்டுல தான் இருக்கோம்! - கயல்விழி
எப்படி??? - ஷ்ரவன்
எப்படினா?? புரியல.... - கயல்
எப்படினா?? எப்படி சொல்றது... உங்களுக்குள்ள சண்டையே வராதா?? ஈகோ கிளாஷ்?? அடிதடி... இப்படி ஏதாவது??' என்று கேட்ட போது ஷ்ரவன் முகம் காட்டிய உணர்ச்சிகளை தெளிவாய் படித்துவிட்டாள் மலர்விழி!
முதல்ல நீங்க உங்களை பத்தி சொல்லுங்க ஷ்ரவந்திகா... சீக்கிரம் இப்போ போன் செய்யறவங்களுக்கு நாங்க உங்கள பத்தி சொல்லனும்... இல்லைனா அதுக்கு பாட்டு விழும்! - என்றாள் சங்கு.
சரி.. சரி... சொல்லறேன்... பட் ஒன் கண்டிஷன்! என்று நிறுத்த... 'நாங்க எங்களை பத்தி சொல்லறோம்!' என்றாள் கயல்.
புன்னகைத்தவாறு 'என் பேர் ப்ரீத்தி ஷ்ரவந்திகா. எங்க அம்மா காயத்ரி... அப்பா கேசவன்...ஒரு தம்பி...முரளி கிருஷ்ணன்...எங்க சொந்த ஊர்... தஞ்சை பக்கம் ஒரு கிராமம் ...பூஞ்சோலைனு பெயர்.. என் பாட்டி அலமேலு அங்க தான் இருக்காங்க... நான் பி.காம் முடிச்சிட்டு... எம்.காம் கரஸ்ல முடிச்சேன்... அப்படியே அண்ணா யுனிவர்சிட்டியில எம்.பி.ஏ முடிச்சேன். அதுவும் போர் அடிச்சதால இப்போ சி.ஏ இண்டர் கிளியர் செய்துட்டு ஒரு ஆடிட்டிங்க் ஃபார்ம்ல் அசிஸ்டண்டா ஜாயின் செய்திருக்கேன்! இருங்க எங்கனு தானே கேட்கறீங்க??? வெயிட் சொல்லறேன்! உங்களுக்கு தெரியுமானு தெரியல... நாதன் அஸ்சோசியேட்ஸ் னு பேர்!'
'என்னது??' என்றனர் மற்ற நால்வரும் கோரஸாய்.
ஏன்? இப்படி கேட்கறீங்க? உங்களுக்கு தெரியுமா?
இல்ல... தெரியாது... வித்யாசமா இருக்கா உங்க கம்பெனி பேரு... அதனால தான்.... எங்க இருக்கு உங்க ஆஃவிஸ்??' என்றாள் மலர் சுதாரித்துக்கொண்டு
கோட்டூர்புறம் ல இருக்கு... ஏன் கேட்கறீங்க?
உங்க முழு பேரு என்ன சொன்னீங்க??
ப்ரீத்தி ஷ்ரவந்திகா...' என்றாள்.
ப்ரீத்தி!!!' என்று முணுமுணுத்தவாறு பார்வையை பரிமாறிக்கொண்டனர் மலர், கயல், சங்கு மற்றும் கவின்.
என்னை ஷ்ரவந்திகாநு தான் கூப்பிடுவாங்க...' என்றாள் சற்றே தயங்கியபடி.
இல்ல... எங்களுக்கு நீங்க இனிமே ப்ரீத்தி தான்... உங்களை அப்படி தான் கூப்பிடுவோம்!' என்றனர் மற்ற நால்வரும் ஒரு சேர!
சிறிது யோசித்துவிட்டு 'சரி' என்றாள். இப்போ நீங்க எல்லாம் சொல்லுங்க...
சங்கமித்ராவுக்கு ஒரு அழைப்பு வந்தது. ஹே... ஒரு நிமிஷம்... தேவா இஸ் காலிங்..' என்றபடி அழைப்பை ஏற்றாள்.