(Reading time: 32 - 63 minutes)

காரின் முன் இருக்கயிலிருந்து இறங்கியவர் லிங்கம் மற்றும் ராமுவின் ஜாடையில் இருந்தார். பார்த்தவுடன் புரிந்துவிட்டது அவர்தான் கிருஷ்ணன் என்று! அதற்குள் கவின் சென்று பின் கதவினை திறக்க கல்யாண மாப்பிள்ளை பெண்ணை எதிர்பார்த்தவள் எழுபது எண்பதில் இருக்கும் வயதான தம்பதியர் இறங்குவதை தான் கண்டாள்!

ஹே... லோட்டஸ் வந்தாச்சு!' என்று அந்த வயதான பெண்மணியின் கால்களை கட்டிக்கொண்டாள் பத்து வயது சிறுமி கவின்.

ஹே குட்டிமா...எப்படிடா இருக்கீங்க?' என்றபடி இறங்கினார் அந்த முதியவர். அதற்குள் வாசலில் இருந்த வேலனும் வீட்டு உதவிக்கு இருந்த மாரியப்பன் மங்காவும் விரைந்து வந்து அவர்களது உடைமைகளை காரிலிருந்து இறக்கினார்கள். 'சூர்யா...' என்றவாறு அவரையும் அனைத்துக்கொண்டாள் கவின்.

மற்ற மூவரும் கூட அவர்களது ஆனந்தத்தை வெளிப்படுத்த அவர்களையும் ஆரத்தழுவிக்கொண்டார்கள். அப்போது தான் டிரைவர் சீட்டிலிருந்து இறங்கி வந்தவனை ஒரே ஒரு கணம் பார்த்து அதிசயத்துவிட்டாள் ப்ரீத்தி. ஆனால் மறுகணமே தன்னிலை உணர்ந்து சுதாரித்தாள். 'ச்சே... என்ன இது? விஷு நினைப்பாவே இருக்கறதனால எல்லாரையும் பார்த்தா அப்படி தான் தெரியுதோ... அடி லூசு கொஞ்ச நாழி அந்த அபிஷ்டூவை பத்தி நினைக்காம இரு!' என்று தன் மனதினை தானே அடக்கிக்கொண்டாள். ஆனால் ஏனோ எதிரில் வந்தவனும் ஒரு அதிசய பார்வையை தான் தந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்...

ப்ரீத்தி... இவங்க எங்க தாத்தா சூர்யபிரகாசம்... இவங்க எங்க பாட்டி தாமரை.. அப்புறம் இவர் எங்க அண்ணா...ஆதித்யன் தேவநாதன்..' என்று கயல் கூற 

இவர்தான் கிருஷ்ணன் அங்கிள்' சரியா என்றாள் ப்ரீத்தி.

யார் இந்த பெண் என்பது போல் பார்த்த நால்வருக்கும் தாமரையின் தோழி அலமூவின் பேத்தி என அறிமுகம் செய்து வைத்து அவர்கள் அங்கு வந்திருப்பதையும் கூறினாள் சங்கமித்ரா.

உள்ளே சென்று பரஸ்பர நல விசாரிப்புகள் முடிந்து சிறிது நேரத்தில் தயாராகி வந்தனர் அனைவரும். பூஜைக்கு நேரமாக மற்ற அண்ணன்கள் எங்கே என்று பார்க்கச்சொல்ல சங்கமித்ரா மொபைலை கையில் எடுத்த நேரம் வாசலில் கார் நிற்கும் சத்தத்தில் வாசல் நோக்கி சென்றாள்.

சித்து அக்கா??!!' என்று அவள் விரைந்து ஒட அங்கே ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வந்துக்கொண்டிருந்தார்கள். சங்கமித்ராவும் அவள் கூறிய சித்து அக்காவும் கட்டிப்பிடித்துக்கொண்டார்கள். என்ன சித்து அக்கா... சொல்லாம் கொள்ளாம கிளம்பி வந்திருக்கீங்க??

சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான்! அண்ணாகிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன்..அவரை சொல்ல வேணாம்னு நான் தான் சொன்னேன்..எங்க மாப்பிள்ளையும் பொண்ணும்??' என்றபடி சித்து உள்ளே வர சிரித்துக்கொண்டே சங்குவிடம் அடிவாங்கியபடி உள்ளே நுழைந்தவனை எங்கேயோ பார்த்த நினைவு ப்ரீத்திக்கு!

ப்ரீத்தி... அவர் எங்க அண்ணா சஞ்சய் சுவாமிநாதன்... அவ என் சிஸ்டர் சித்ர நவிரா...' என்று காதை கடித்தாள் கயல்விழி.

எங்க நம்ம கல்யாண மாப்பிள்ளையும் பொண்ணும்? என்று கூறியபடி 'தாத்தா...' என்று அவரைக்கட்டிக்கொண்டாள் சித்ரா. என்ன மாப்பிள சார்.... முகத்தில களையை காணோம்?? என்றாள்.

அவர் கோபமாய் ஏதோ பேச வருவது போல் முகத்தை வைத்துக்கொண்டு பேச தொடங்க...அதை தடை செய்யுமாறு சித்ரா தொடர்ந்தாள். 'என்னடா இந்த தாமரையை திரும்பவும் கட்டனுமானு தானே யோசிக்கறீங்க?? அப்படி ஏதாவது  இருந்தா சொல்லுங்க... நாங்க வேற நல்...ல பொண்ணா பார்த்து உங்களுக்கு கட்டி வெக்கறோம்... உங்க அம்மாவும் அப்பாவும் உங்களுக்கு செய்த அநீதிக்கு நாங்க ஒரு நல்ல பதில் தரோம்' என்றபடி அவள் கண்சிமிட்ட

தாமரை பாட்டியோ..'அப்பா...டா... இப்போவாது இவர்கிட்டயிருந்து என்னக்கு விடுதலை கிடச்சா பரவாயில்லை! அவருக்கு பார்க்கும் போது அப்படியே எனக்கும் ஒரு நல்...ல பையனா பாரு...இந்த அஜீத்... சூர்யா..விக்ரம்... இந்த பசங்கள மாதிரி  பாரு... முத்துராமன் மாதிரி இக்காருனு இவரை கட்டிக்கிட்டது தப்பா போச்சு!' என்று குறைபட

அலமூ பாட்டியோ..' ஏண்டீ தாமர.. முத்துராமன் மாதிரி தான் மாப்பிள வேணும்நு கேட்டு இவரை கட்டிக்கிட்டதுக்கு... அவரை விட்டிருந்தா தேவிகா மாதிரி ஒரு பொண்ணு... என்ன தேவிகா மாதிரி... நம்ம ஊரு தேவிகாவே இவரைக்கட்டியிருக்கும்ல? பாவம் அவ... உன்னால அவ ஆசை நிறைவேறாம போச்சு...' என்று அவர் பங்குக்கு வார அந்த இடம் எங்கும் சிரிப்பலை நிறம்பியிருந்தது.

அந்த நிலையை கலைக்குமாறு யாரோ படியில் வேகமாய் இறங்கி வரும் காலடியோசை கேட்க எல்லோரும் படியை பார்த்தனர். சட்டேன்று அங்கு இருந்த சூழ்னிலை மாறி ஒரு அசாத்திய அமைதி குடிக்கொண்டதை போல் உணர்ந்தாள் ப்ரீத்தி.

ஆறடி உயர மனிதன் கம்பீர நடையுடன் இறங்கி வந்தான். அந்த குடும்பமே அவனை விழி விரிய பார்த்துக்கொண்டிருந்தது. எல்லோரும் ஒரு வித ஆனந்தத்துடன் அவனை பார்க்க தாத்தா மட்டும் முகத்தில் கோபம் பரவ முகத்தினை திருப்பிக்கொண்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.