“என் கிட்ட அந்த கலர்ல சாரி இருக்கு அத்தான்…..நம்ம மேரேஜ் சாரி எல்லாத்தையும் விட ஸ்பெஷலாக இருக்க வேண்டாமா?” என்றவளின் கூற்று மனதிற்கு சரியெனப் பட சரி என்று ஆமோதித்தவன்.
“இருந்தாலும் என் ஆசைக்கு இந்த கலர்ல ஒரு ஸாரி எடுத்துக்கோ அனிம்மா, பின்னே எப்பவாவது உடுத்துக்கோ” எனக் கூறவும் அனிக்கா மிகவும் பிகு செய்துக் கொண்டு அதில் ஒன்றை தெரிவுச் செய்தாள்.
ஊர் உலகத்தில உன்னை மாதிரி பொண்ணு பார்க்க கிடைக்கிறது ரொம்பவே கஷ்டம் தான் என சலித்துக் கொண்டவனைப் பார்த்து அவள் புருவம் உயர்த்தவும்,
“நகை, புடவைன்னா பொண்ணுங்க ஆசைப்படுவாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன். இங்க நான் தான் கெஞ்சிக் கூத்தாடி உனக்கு வாங்கி கொடுக்க வேண்டியிருக்கு”
என்றவனை மற்றவர்களுக்கு தெரியாதபடி நாக்கை துருத்தி பழிப்புக் காட்டினாள்.
இங்கே இவர்கள் திருமண உடைத் தெரிவில் மும்முரமாக இருக்க, அங்கே ஜீவன் மற்றும் திவ்யா என்னச் செய்கின்றனர் என்றுப் பார்ப்போம்.
திவ்யாவுடன் ரெஸ்டாரெண்டிற்கு சென்ற ஜீவன் அவளிடம் ஏதேதோ கதைகள் பேசிக் கொண்டிருந்தான். ஓரளவு சாதாரணமான பேச்சுக்கள் முற்று பெற, எந்த டாபிக் பேசுவது என்றுத் தெரியாமல் திவ்யா,
ஜீவா நாம போனோமே பிக்னிக்…….. அன்னிக்கு அனி கடலில் மூழ்கியிருந்தா இல்லியா அது விஷயமா ஒருத்தரோட உருவம் வரையறதுக்கு……. ஸ்கெட்ச் போட…….என்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போன இல்லியா? பின்ன அது என்னாச்சு? ஏதாவது விபரம் தெரிஞ்சதா என கேட்டு வைத்தாள்.
ஹ்ம்ம் அந்த விஷயம் தானே….……அவ்வளவ்ய் ட்ரை பண்ணியும் அது யாருன்னே கண்டு பிடிக்க முடியலையாம், அன்னிக்கு பீச்ல நடந்த சம்பவம்……..யாரோ விளையாட்டுக்கு செஞ்சதா இருக்கும்னு டிடெக்டிவ் ஏஜென்சில சொன்னதா அண்ணன் சொல்றான். ஆரம்பத்திலேயிருந்து நானும் இதையேதான் சொன்னேன்………. அவன் கேட்டாத்தானே………. அனிக்காட்ட விசாரிக்க போக, அவளும் தன்னை யாரோ காலைப் பிடிச்சு இழுத்து கடலுக்கு உள்ளே அழுத்தினதா சொன்னதும் எனக்கு இன்னும் திகிலா போச்சு….ஆனா அதுக்கு பின்னாடி ஒரு பிரச்சினையும் இல்லைங்கிறப்போ, நிச்சயமா அது ஏதேச்சையா நிகழ்ந்த ஒண்ணாதான் இருக்கணும்.
ம்ம்……
எல்லாம் இந்த லவ் படுத்தற பாடு, எங்க அண்ணனுக்கு அவன்னா உயிரு அதான் இப்படி ஒரு சின்ன விஷயம் கூட அவனால பொறுத்துக்க முடில அப்படி பதறிட்டான்.
மறுபடியும் ம்ம் என்றவளிடம்
ஏன் திவ்யா நீ லவ் பத்தி என்ன நினைக்கிற…….? மெல்லிதாக தூண்டில் போட்டான்.
உங்க அண்ணன் , அனி ரெண்டு பேரும் லக்கி ,அவங்க லவ் ரொம்பவே சூப்பர். ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்காம இவ்வளவு நேசிக்கிறாங்க….எனக்கு ரொம்பவே ஆச்சரியமா இருக்கும்…..என்று தொடர்ந்தவளை பாதியில் நிறுத்தியவன்…
திவ்யா நான் அவங்க லவ் பத்திக் கேட்கலை, பொதுவா லவ்னா உனக்கு எப்படித் தோணும் ? இப்ப நான் தான் உன்னை லவ் பண்றேன்னு சொல்றேன்னு வச்சுக்கோ? அப்ப நீ என்ன சொல்லுவ?
சட்டென்று இருக்கையை விட்டு எழுந்து விட்டிருந்தாள் அவள். சட சடவென்று பேசுகின்றவள் தான் ஆனால் கொஞ்ச நாளாக அவள் இயல்பே மாறிப் போயிருந்ததே………சட்டென்று பேச்செழவில்லை.
ஹேய் உக்காரு திவ்யா என்று அவளை அமரச் செய்தவன்.ஆர்டர் செய்திருந்த ஜூஸை அவளருகே நகர்த்தினான். மௌனத்தில் நொடிகள் நகர துளி துளியாக பருகினாலும் ஜூஸ் தீர்ந்தே ஆக வேண்டியது தானே……….
பதிலுக்காக காத்திருக்கிறான் என்றுத் தெரிந்தும் சொல்லாமல் நேரம் கடத்தியவள்.
அதெல்லாம் சரிப்பட்டு வராது ஜீவா. என்றாள்…
ஏன் சட்டென்று கேள்வி எழுப்பினான் ஜீவன்.
எனக்கு சட்டு சட்டுன்னு கோபம் வரும்………..
ஆனா எனக்கு வராதே, நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.
உனக்கு என்னை விட நல்ல பொண்ணு கிடைக்கும்……..
எனக்கு நீ தான் வேணும், உனக்கும் என்னை பிடிக்கும்னு தெரியும் சும்மா பொய் சொல்லாத……. உனக்கு நான் யார் கிட்டயும் க்ளோஸா பழகுறது பிடிக்கலைன்னா வேணும்னா கொஞ்ச கொஞ்சமா குறைச்சுக்கிறேன் என்றவனை அடிப்பட்ட பார்வைப் பார்த்தாள் திவ்யா…
நான் அப்படியொன்னும் சொல்லலை……நான் அன்னிக்கு அனிக்கும் உனக்கும் உள்ள ஃப்ரண்ட்ஷிப் தெரியாம பேசிட்டேன்.அதுக்காக உன்னை தப்பாவே நினைப்பேன்னு நினைக்காத………..அனி எங்கேஜ்மெண்ட் அன்னிக்கு உன்னைச் சுத்தி எல்லா லேடீஸ் பாத்ததும் என்னையறியாம ஜெலஸ் ஆனேன்தான். என்னமோ தெரியலை உன் கிட்டதான் இப்படி ஆயிடுறேன். ரொம்ப உரிமை எடுத்துக்கிறேன் போலிருக்கு….இனி அப்படி நடந்துக்க மாட்டேன்.
இதிலருந்தே உனக்கு என்னைப் பிடிக்கும்னு தெரியலையா? இன்னும் ஏன் மனசை மறைக்கிற………