நீங்க ஃப்ராட் அத்தான்..
நான் என்னச் செஞ்சேன்
என்னைக் கேட்காமலே தூக்கிட்டு வந்திருக்கீங்க…
ஆமா நான் ஃப்ராட் தான்…
நீங்க பக்கா வில்லன்
தேங்க்ஸ் பொண்டாட்டி
நான் ரொம்ப நல்லவங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன்
அப்படியா..
ஆனா நீங்க அப்படி இல்லை…..
பரவால்லை.அட்ஜஸ்ட் பண்னிக்க
நான் உங்க கிட்ட கோபப்படறேன், திட்டறேன் , நீங்க கண்டுக்கவே மாட்டேங்கீங்க அத்தான்….. சிணுங்கியவளிடம்
உனக்கு என் மேல கோபம் திட்டுற, எனக்கு தான் உன் மேல கோபம் இல்லியே..
இப்படிதான் அன்னிக்கும் சொன்னீங்க…….
என்னிக்கு…
சற்று நேரம் கழித்து பேச்சு வார்த்தைகள் கொஞ்ச கொஞ்சமாய் தேய்ந்து பின்னர் இல்லாமல் போயிற்று..
நள்ளிரவில் எழுந்த ரூபன் கைவளைவில் அமைதியாய் துயில் கொண்டிருந்த அவன் மனைவியைக் கண்டான். மிச்ச சொச்ச முத்தங்களை அவள் முகம் முழுக்க பதிக்க ஆசை வந்தது. தூங்குகிறவளை முத்தமிடலாமா? என ஆராய்ச்சி செய்த மனதை அடக்கி விட்டு ஆசையாய் தன் காதலை முத்தங்களாய் அவளில் பதிக்கலானான்.
ம்ம்.. வேண்டா அத்தான் தூக்கத்தில் முகத்தை துடைத்தவளை சீண்டி மீண்டும் முத்தங்கள் பதித்து மார்போடு சேர்த்தணைத்துக் கொண்டான். அன்று பொழுது விடியும் போது அவன் உள்ளத்திலிருந்த அத்தனை தனிமை உணர்வும், கசப்புணர்ச்சிகளும் மறைந்து மனம் நிர்மலமாய் இருந்தது.
அடுத்த அத்தியாயத்தில் முற்று பெறும்
{kunena_discuss:970}