முன்னால், யார் பின்னால்' என்ற நிலைமைக்கு வந்துவிட்டார்கள். தன் விஷயத்தில் அனுகூலமாய் ஆதரவுகாட்டி. வந்த மாமி, மாமனின் கதி இவ்விதம் படுக்கையாகிவிட்டதைக் கண்ட குணவதிக்குப் பெருந்துக்கம் பொங்கிவிட்டது.
அன்று பொன்னுசாமி வீட்டிற்கு வந்தான். அவனை வழி மறித்துக்கொண்ட குணவதி, அன்றே முதல்முதல் அவனெதிரில் தைரியமாகப் பேசத்துணிந்து “நாதா! உங்களை ஈன்றெடுத்த தாய் தந்தையர்கள் பாயும் படுக்கையுமாகி விட்டார்களே! இன்னுமா நீங்கள் கவனியாதிருப்பது. இது அடுக்குமா! நான் தான் வேண்டுமானால் தங்களுக்குச் சத்ருவாகத் தோன்றலாம். உங்களைப் பத்து மாதம் குட்சியில் வைத்துச் சுமந்து ஈன்ற அன்னையல்லவா! அவர்கள்மீது உங்களுக்குத் தானாக உண்டாகக்கூடிய அன்னை என்கிற பாசம் எங்கே மறைந்துவிட்டது? தாயன்பின் மகிமையைப்பற்றி பெரிய, பெரிய துறவிகள் எல்லாம் எப்படிக் கூறி இருக்கின்றார்கள். பட்டினத்துப் பிள்ளையின் செய்கையிலிருந்து தாயின் மாசிலாத அன்பு கூறத் திறமுள்ளதா! அவர்களை நீங்கள் பார்க்காமலேயே போகின்றீர்களே." என்று ஏதேதோ சொல்வதற்குள் பொன்னுசாமி அளவுகடந்த ஆத்திரத்தையடைந்து "சீச்சி! விலகு. பெரிய புராணிகர்போலப் பேசவந்துவிட்டாய்! கழுதை!" என்று உதைத்துத் தள்ளினான்.
-----
அப்போதும் குணவதி அவனை விடாது காலை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு "என்னைத் தாங்கள் என்ன செய்தபோதிலும் சரியே! நான் இனி துணிந்துவிட்டேன். என்னைத் தாங்கள் இவ் விதமான இம்சை - சித்திரவதை - செய்வதை விட என்னுயிரைத் தங்கள் கரத்தினாலேயே தாராளமாக வாங்கி விடுவது வெகு நலம். அச் செய்கையினால் மிக்க மகிழ்ச்சியை அடைவேன். நான் எடுத்த ஜன்மத்திற்கு இந்தப் பலனையேனும் அடையும்படியான வரனை யளிப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். தங்களுடைய இக்காலத்து பால்ய லீலைகளின் பலனைத் தாங்கள் இப்போதில்லா விடினும் மற்றொரு காலத்தில் அதுபணித்து ஏங்காமலிருக்க மாட்டீர்கள். நாதா! உயிர் நீங்கிவிடின் அவர்களைத் தவம் செய்தாலும் கண்ணால் காண்பதற்கு முடியாதென்பதை மறக்கவேண்டாம்" என்று கூறிக்கொண்டே இருக்கையில் பொன்னுசாமி ஆவேசத்துடன் பேசத் தொடங்கி "போதும் உன் வார்த்தைகளை நிறுத்து. தாயின் அன்பு எனக்குத் தெரியும். அவளுடைய கடின சித்தத்தினால் என்னை வருத்திக் காசு கொடாது உபத்திரவிப்பது வீண் போகுமா?" என்று கூறிக்கொண்டே போய்விட்டான்.