(Reading time: 34 - 68 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

-----

   

பொன்னுசாமியின் இரும்பு போன்ற சித்தத்தின் போக்கைக் கண்டு குணவதி மிக்க விசன மடைந்தாள். மோகனா ஒரு கச்சேரியின் நிமித்தம் வெளியூருக்குச் சென்றிருக்கையில் குணவதிக்கு திடீரென்று ஜூரங் கண்டுவிட்டது. சில நாளையில் இந்த ஜூரம் டைபாயிடு என்று டாக்டர் கூறிவிட்டார்.

   

குணவதியினுடைய நிலைமையைக் கண்ட அவள் மாமி, மாமனுக்கு மிக்க பயம் பிடித்து விட்டதால் அவர்கள் தங்கள் நோய் குணமாகிவிட்டதாக நினைத்து மருமகளைக் கவனிக்க வேண்டிய வேலைகளையே செய்துவந்து வெகு அக்கரையாகப் பாடு பட்டார்கள். குணவதியோ தான் பாயில் விழுந்த நாள் முதலாக அவளுடைய மனம் ஒருபுறம் மிக்க சந்தோஷத்தையும், மற்றொரு புறம் கரை காணா விசனத்தையும் அடைந்தது.

   

ஏனெனில் தான் இந்த நோய் குணமாகாமல் இப்படியே இறந்துவிடவேண்டும் என்று சந்தோஷித்தாள். ஆனால் தன்மீது உயிரையே வைத்திருக்கும் மாமி, மாமனின் கதி அதோகதியாகி அவர்கள் பின்னும் துக்கத்தி லாழ்ந்து விடுவார்களே; என்கிற விசனம். இவ்விரண்டு விதமான உணர்ச்சிகளினால் மிக்க தத்தளித்து வருந்துகின்றாள். அவளுடைய விசனத்தை வெளியிடவும் அஞ்சுகிறாள்.

   

வாய் பிதற்றல் முற்றும் "என் புருஷன் வந்தாரா, வந்தாரா!" என்று கத்துவது. இவளுடய நிலைமையைக் கண்டு மனமுருகும் மாமி "அம்மா! குணவதீ! உன் பெயருக்கேற்ற குணத்தை உன்னிடமே கண்டோம். என் செல்வமே! நாங்கள் உன்னையே நம்பி இருக்கின்றோமே! எங்களை மோசம் செய்துவிடுவாயோ! மகா பாபத்தைச் செய்துள்ள எங்கள் கதி என்னவாகுமோ! ஹா! சர்வேசா! குணவதியை எங்களுடைய ஆயுள் உள்ள பரியந்தமாவது அளிப்பாய் அப்பனே!" என்று வேண்டுகிறாள்.

   

-----

   

அவர்களுடைய கஷ்டத்தைக் கண்டு சகியாத குணவதிக்கோ தான் இனி பிழைப்பது துர்லபம் என்று தெரிந்துவிட்டது. ஆனால் அவர்களுக்கதை அறிவிக்கவும் மனம் கூசினாள் ; எனினும் தன் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.