(Reading time: 36 - 71 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

நல்ல புத்தியைக் கொடுப்பாயா! ஐயோ! அம்மா!" என்று கதறி மூர்ச்சையாகிறான்.

   

-------

   

அடுத்த நாள் செக்கு இழுக்கும்போது கண்ணீர் வடிகின்றது. "ஐயோ! கடவுளே! என்னைப் போன்ற துர்ப்புத்தியுள்ளவர்களை இனி உலகத்தில் பிறப்பிக்காதே. அவர்களை நல்வழிப்படச் செய்து விடு. நான் படித்து என்னுடைய அறிவை விருத்தி செய்து கொண்டிருந்தேனேயானால் இவ்விதம் சிறையில் சிறுமைப்பட வேண்டுவதில்லையே! என் போன்ற இளம் வாலிபர்களே! நீங்கள் 'கடவுள் ஒருவன் இருக்கிறான். ஆக்குவதும் அழிப்பதும் அவன்தான். அவனால்தான் உலகமிருக்கின்றது' என்று உங்கள் அறிவு உங்களுக்குத் தெரிந்த உடனேயே நம்புங்கள். என் போன்று பாபத்திற்குப் பங்குதாரி யாக வேண்டாம். துஷ்ட சகவாசம் செய்யவேண்டாம். சிறு பிரா யத்தில் கோலியாடித் திரிய வேண்டாம். தாயின் சொல்லை அலக்ஷயம் செய்ய வேண்டாம். என் போன்று செக்கு இழுக்கும் மனிதனாக வேண்டாம்" என்று தன் போக்காகக் கதறுகின்றான்.

   

இதைக் கண்ட அதிகாரி, "அடேய் திருட்டு நாயே ! உன் வேலைபைக் கவனியாது ஏதேதோ உளறுகின்றாயா! யாருக்கடா இங்கு புத்திமதி கூறுகின்றாய்! உன்னெதிரில் இருப்பவர்கள் உன் போன்ற பழைய-கேடிகள் என்பதை மறந்து உளறுகின்றாயோ? உன் பவிஷுக்குப் பெரிய வேதாந்தம் படிக்கின்றாயே! உன் வேதாந்த மூட்டையைத் தூரே கட்டி வை; அதை அவிழ்க்க செக்கு இழுக்கும் இடம் சரியல்ல! உம், நட!" என்று அதட்டி உதைக்கின்றான்.

   

அதற்கு அடுத்த நாள் கவலையில் தண்ணீர் பாய்ச்சுகிறான். மேலும், பள்ளத்திலும் ஏறி ஏறி இறங்குவதற்குள் சிரமம் தாங்காது மூர்ச்கையாகி விடுகிறான். பிறகு மறுதினம் வண்டி இழுக்கிறான். இவ்விதமான கஷ்டங்களைச் சிறையில் படுகையில் கொஞ்ச கொஞ்சமாய் புத்தி மாறுதலை யடைந்து தன் குற்றத்தை உணர்ந்து சதா கதறியவாறு தன் காலத்தைக் கடத்துகிறான். "எப்போது நான் விடுதலையடைந்து என் தாயைக் காண்பேன்?" என்கிற ஏக்கம் பிடித்துவிடுகின்றது. தன் சகோதரிகளையும் சகோதானையும் நினைத் துப் புலம்புகிறான். விசனத்தினாலும் கடின வேலையினாலும் உடம்பு எலும்புக் கூடாக ஆய் விடுகின்றது. சிறைச்சாலையிலேயே நடக்கவும் மாட்டாது மிக்க மெலிந்து போய் விடுகிறான்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.