ஸோமே : இதென்ன ஆச்சரியம்! நீங்கள் தான் பரிஹாஸம் செய்கிறீர்கள்! வீணில் என்னோடு வாக்குவாதம் செய்யாமல் நகை மூட்டை இருக்கிறதா என்று முதலிற் பாருங்கள்.
மாத : நீ என்னிடத்தில் எப்பொழுது கொடுத்தாய்?
ஸோமே : உங்கள் கை குளிர்ச்சியாய் இருக்கிறதென்று சொல்லிக் கொண்டே சற்று முன்பாகக் கொடுத்தேனே!
மாத : (தனக்குள்) ஓகோ! அப்படித்தான் இருக்க வேண் டும் (நான்கு பக்கங்களையும் சுற்றிப் பார்த்து) மித்திரா! உன்னுடைய உபகாரத்தை நான் மறக்கவே மாட்டேன்.
ஸோமே : ஆபத்து சமயம் என்பதை அறிந்து மூட்டையை உங்களிடத்தில் கொடுத்தேன். இது ஒரு உபகாரமா?
மாத : நீ செய்தது உபகாரமல்ல. ”தரித்திரன் வீட்டிற்குள் நுழைந்தேனே, ஒன்றும் அகப்படவில்லையே” என்று திருடன் என்னைத் துஷிக்காமல் இருக்கச் செய்தாயே! அதுதான் உதவி! (யோசனை செய்கிறார்)
ஸோமே : என்ன ஆச்சரியம்? மூட்டை திருட்டா போய் விட்டது! எப்படிப் போயிற்று? நம்மை நம்பி அவள் நம்மிடத்தில் ஒப்புவித்தாளே!
மாத : (பெரிதும் விசனத்துடன்) ஆஹா! நம்பிக்கை மோசம் செய்து விட்டேனே! அவள் வந்து கேட்டால் என்ன சொல்வேன்? ஈவரா! (மூர்ச்சிக்கிறார்)
ஸோமே : ஸ்வாமி! வருத்தப்பட வேண்டாம். நகைகளைத் திருடன் கொண்டுபோய்விட்டால் அதற்கு நாமென்ன செய்கிறது? இதைப் பற்றி நீங்கள் இவ்வளவு விசனப்படுவானேன்?
மாத : அடே மித்திரா! திருட்டுப் போய் விட்டதென்று சொன்னால் என்னை யார் நம்புவார்கள்! எனக்கு என்னமோ பெருத்த துன்பம் சம்பவிக்கப் போகிறது! தரித்திரனிடத்தில் சந்தேகம் உதிப்பதே இந்த உலக இயற்கை. இதுவரையில் நான் ஏழ்மைத் தன்மையினால் வருந்தி