இருந்தேன்! இப்பொழுது என்னுடைய பரவிய கீர்த்திக்கும் அழிவு காலம் வந்துவிட்டதே!
விருத்தம்: முகாரி
போனதோ பெருமை யின்று! புகழெலா மழியக்கால
மானதோ! பொருளிலான் சொல் யாவரே மதிப்பர்? தீமை
யானதோ புரிந்தே னிந்த அலக்கணிற் கருக னாத
லேனிதோ முன்னாட் டீமை? எங்ஙணம் பொறுப்பே னேழை.
ஐயோ! தெய்வமே! என்ன செய்யப் போகிறேன்?
ஸோமே : இதைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சமும் கவலை வேண்டுவதில்லை. அவள் நம்மிடத்தில் ஒப்புவித்ததை பார்த்தவர் யார்? அதற்கு ஸாஷியும் இல்லை ஒன்றும் இல்லை. நம்மிடத்திற் கொடுக்கவில்லை என்று நான் சொல்லி விடுகிறேன். நீங்கள் பயப்பட வேண்டாம்.
மாத : (செவிகளை மூடிக் கொண்டு) ஆகா!
விருத்தம்: மோகனம்
என்னசொன் மொழிந்தாய் என்னுயி ரழிந்திட்டாலும்
இன்னமு மனைத்து நீங்க இழிதக வெய்திட்டாலும்
முன்னுள துறக்க மென்னு முயர்கதி மொழிந்திட்டாலும்
சொன்னசொன் மறுப்பதுண்டா? உன்னலும் பாவ மன்றோ!