(Reading time: 20 - 40 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

இருந்தேன்! இப்பொழுது என்னுடைய பரவிய கீர்த்திக்கும் அழிவு காலம் வந்துவிட்டதே!

   

விருத்தம்: முகாரி

   

போனதோ பெருமை யின்று! புகழெலா மழியக்கால

   

மானதோ! பொருளிலான் சொல் யாவரே மதிப்பர்? தீமை

   

யானதோ புரிந்தே னிந்த அலக்கணிற் கருக னாத

   

லேனிதோ முன்னாட் டீமை? எங்ஙணம் பொறுப்பே னேழை.

   

ஐயோ! தெய்வமே! என்ன செய்யப் போகிறேன்?

   

ஸோமே : இதைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சமும் கவலை வேண்டுவதில்லை. அவள் நம்மிடத்தில் ஒப்புவித்ததை பார்த்தவர் யார்? அதற்கு ஸாஷியும் இல்லை ஒன்றும் இல்லை. நம்மிடத்திற் கொடுக்கவில்லை என்று நான் சொல்லி விடுகிறேன். நீங்கள் பயப்பட வேண்டாம்.

   

மாத : (செவிகளை மூடிக் கொண்டு) ஆகா!

   

விருத்தம்: மோகனம்

   

என்னசொன் மொழிந்தாய் என்னுயி ரழிந்திட்டாலும்

   

இன்னமு மனைத்து நீங்க இழிதக வெய்திட்டாலும்

   

முன்னுள துறக்க மென்னு முயர்கதி மொழிந்திட்டாலும்

   

சொன்னசொன் மறுப்பதுண்டா? உன்னலும் பாவ மன்றோ!

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.