(Reading time: 49 - 98 minutes)

“சம்திங் ராங்... மறுபடியும் ட்ரை பண்ணி பாருங்க...” என்றார் குழப்பத்துடன்.

அடுத்த சில நிமிடங்களில்,

போனில் பேசிக் கொண்டிருந்த டவர் இன்ஜினீயர் சிவ்ராம்ஜி திடீரென்று கத்தினார்.

“சார்... அந்த CROSS TALK கால்-ஓட LOCATION - TRACK பண்ணிட்டாங்க சார்...”

மிகுந்த ஆச்சர்யத்துடன் எல்லாரும் அவனைத் திரும்பிப் பார்க்க, அவன் பக்கம் வந்த இன்ஸ்பெக்டர் விகாஷ் ஷர்மா.,

“இஸ் இட்...? எந்த ஏரியா...?” என்றார் ஒரு வித எதிர்பார்ப்போடு.

“ சார்... ஜவகர் நவோதய வித்யாலயா ஸ்கூல் பக்கத்தில தான் சார், அவங்க பேசின கால் TRACK ஆயிருக்கு சார்...”

உடனே அதிர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் குர்தாஸ் சிங்,

“சார்... நம்ம TEAM-3 கான்ஸ்டபிள் ஸ்வதீப் ராஜ், ரிப்போர்ட் பண்ண போட்டிருந்த இடம் சார்... ஹி இஸ் ஆல்சோ மிஸ்ஸிங் சார்...”

எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்த அடுத்த வினாடி, திடீரென்று இன்ஸ்பெக்டர் விகாஷ் ஷர்மாவின் செல்போன் அலறியது. எடுத்துப் பார்த்த நொடி, கன்ட்ரோல் ரூமில் இருந்து அழைப்பு வந்திருந்தது.

அதை உடனே எடுத்து அட்டென்ட் செய்த அவர், “ஹலோ, இன்ஸ்பெக்டர் விகாஷ் ஷர்மா ஹியர்...” என்றார்.

மறுமுனையில் இருந்த குரல்,

“சார்... திஸ் இஸ் அன் இம்பார்டன்ட் இன்பார்மேசன் ஃப்ரம் கன்ட்ரோல் ரூம். இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, கன்ட்ரோல் ரூமுக்கு ஒரு தகவல் வந்துச்சு. அதன்படி, ஹுசைனிவாலா ஜவகர் நவோதய வித்யாலயா ஸ்கூல் பக்கத்தில இருக்கிற, குப்பை கூளங்கள் நிறைந்த தரிசு நிலத்தில், சந்தேகத்திற்கிடமான நபர்களோட நடமாட்டம் இருக்கிறதா, “ஜாஃபர் காதிம்”ங்கற ஒரு நபர்கிட்ட இருந்து தகவல் வந்திருக்கு. SO, உடனே நீங்க உங்க TEAM-ஓட அங்க போய் விசாரணையை தொடங்குங்கனும் சார்...”

“YES... WILL START IMMEDIATELY...” என்றவுடன் இணைப்பைத் துண்டித்த அவர் மற்றவர்களைப் பார்த்து,

“COME ON GUYS, அவங்களோட இருப்பிடம் கிட்டத்தட்ட உறுதி ஆயிடுச்சு... SAME LOCATION... ஜவகர் நவோதய வித்யாலயா ஸ்கூல் பக்கத்தில இருக்கிற தரிசு நிலம் தான் அவங்க LOCATION... LET’S GO... ”என்று அவர் சொன்னதும், சொற்ப நிமிடங்களில் ஹுசைனிவாலா காவல் நிலையத்தில் இருந்த எல்லா போலீஸ் வாகனங்களும் சம்பவ இடத்தை நோக்கி சீறிப் பாய்ந்திருந்தன.

ன்ட்ரோல் ரூமுக்கு தகவல் தெரிவித்தவுடன் இணைப்பைத் துண்டித்த ஜாஃபர், வேக வேகமாக மதில் சுவரைத்தாண்டி, அந்த சுரங்கப் படிக்கட்டுகளை நோக்கி விரைந்தான். பதற்றத்துடன் அதில் இறங்க ஆரம்பித்திருந்த அவன் மனதில், பய உணர்வுகள் மேலோங்கியிருந்தது. “எப்படியும் ஆர்யா வந்துவிடுவானே... அவனுக்கு என்ன ஆயிற்று...???” என்ற எண்ணங்கள் அவனுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.

ஒரு வழியாக படிக்கட்டுகள் தன் எல்லையை முடித்து, அவனை ஒரு இருட்டறையின் உள்ளே புகுத்தியிருந்தது. உள்ளே ஒரு வித மயான அமைதி. அதில் அவனின் காலடிச் சத்தம் மட்டும் தெளிவாகத் தெரிந்திருந்தது. 

மனதில் பலவித சிந்தனைகளோடு, தன் கைகளை முன்னே நீட்டியவாறே முன்னேறிக் கொண்டே சென்றிருந்தான் ஜாஃபர். ஒரு பத்து அடி எடுத்து வைத்திருப்பான். தன் பின்னே யாரோ இருப்பதைப் போல் உணர்ந்த அவன், சுதாரித்துக் கொண்டு திரும்ப முயன்ற கணம், திடீரென்று அவன் முகத்தின் மேல் ஒரு துணி போர்த்தப்பட்டு, அவன் கை கால்களை பின்னால் வைத்து ஒரு உருவம் கட்ட ஆரம்பித்தது. அதற்கு பிடி கொடுக்காமல் திமிறிய ஜாஃபர், வேறு வழியின்றி, வலுக்கட்டாயமாக கட்டித் தர தரவென்று இழுத்துச் செல்லப் பட்டான். போகும் இடம் அவனுக்கு புரியாத புதிராய் இருந்தது. 

ஒரு இரண்டு நிமிட நேரத்தில், ஒரு இடத்தில் ஜாஃபரின் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மண்டியிட வைக்கப் பட்டிருந்தான். அவன் கண்களில் கட்டப் பட்டிருந்த துணி இன்னும் அவிழ்க்கப் படாமல் இருக்க, வெளிய கேட்ட அந்தக் குரல் இந்த முறை அவன் பக்கத்தில் இருந்து கேட்டது.

“யார் இவன்...???” 

ஒரு வினாடி மௌனத்திற்குப் பிறகு, 

“இவனும் அவனைப் போல இந்திய இராணுவத்தைச் சேர்ந்தவன் போலத் தெரிகிறது. படிக்கட்டுகள் வழியா இறங்க ஆரம்பிச்சு, உள்ள வர முயற்சி செய்து கொண்டிருந்தான். அதான் கட்டி இழுத்து வந்து விட்டோம்...” என்றது அந்த பின்னாலிருந்த குரல்.”

“ஹ்ம்ம்...” 

இவர்களின் பேச்சு வார்த்தைகளை ஜாஃபர் உன்னிப்பாக கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் உடல் சற்றே நடுக்கத்திற்குள்ளாயிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.