வாழவேண்டாமா? அண்ணனுக்கு திருமணம் ஆகவேண்டாமா? சொல்லுங்க, பெரியப்பா!"
" பிரேமா! உங்கம்மா, என் தம்பிக்கு இரண்டாவது மனைவிதான், ஆனால், முதல் மனைவியோடு அவன் ஒருநாள்கூட வாழவில்லை........அது ஒரு குடும்ப பிரச்னை! எங்களுக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தாள், அவளுடைய மகள் பிறவியிலேயே கருப்பு நிறமாகவும் அழகில்லாதவளாகவும் இருந்ததோடு, வளர்ந்தும் மாறவில்லை! அக்காவுக்கு பயம் வந்துவிட்டது, அவளை யாருமே கல்யாணம் செய்துகொள்ள முன்வராவிட்டால், அவள் கதி?
அதனால், அவள் எங்கள் அப்பாவிடம் வந்து கதறி அழுதாள். அப்பா, அம்மா இருவருமே கலங்கிப்போய், அவளுக்கு ஆறுதலாக இருக்கட்டுமே என்று தங்கள் பிள்ளைகள் மூவரில் ஒருவனை அக்காவின் மாப்பிள்ளையாக்குவதாக சத்தியம் செய்து கொடுத்தனர்.
அக்காவின் மகள் கல்யாண வயதை அடைந்தபோது, எனக்கு திருமணமாகிவிட்டது. அதனால், உங்கப்பாவைத்தான் கட்டாயப்படுத்தி அவள் கழுத்தில் தாலி கட்டவைத்தார்கள். ஆனால், உங்கப்பா வெளிப்படையாக அப்பா, அம்மா, அக்கா மூவரிடமும் தாட்சண்யமின்றி உறுதியாக கூறியபிறகுதான், தாலி கட்டினான்.
" அவளுக்கு தாலி கட்டுவதைத்தவிர, வேறெந்த உறவும் வைத்துக் கொள்ளமாட்டேன், இதற்கு சம்மதமானால், சொல்லுங்கள்!"
அவர்கள் நினைத்தது, 'இப்படித்தான் இப்போது சொல்வான், போகப்போக, மனம் இளகி அவளுடன் நிச்சயமாக வாழ்வான்' என்று கணக்குப்போட்டு, உங்கப்பாவின் நிபந்தனையை ஒப்புக்கொண்டனர்.
ஆனால், உங்கப்பா மனம் இளகவேயில்லை. பிடிவாதமாக இருந்துவிட்டான். காலம் ஓடிக்கொண்டிருந்தது!
தவறு செய்துவிட்ட குற்ற உணர்ச்சியில், அப்பா, அம்மா, அக்கா மூவரும் வேதனையுடன் ஒருவர்பின் வருவராக, போய் சேர்ந்தனர், மேலே!
அதன்பிறகு, அவள் என் குடும்பத்தில் ஒருத்தியாக வாழ்ந்தாள்.
இந்த விஷயத்தை ரகசியமாகவே வைத்திருந்தோம். உங்கம்மாவுக்கு இது தெரியாமல்தான் உங்கப்பாவை கல்யாணம் செய்துகொண்டாள்.
ஆனால், என் அக்கா மகள் என் வீட்டில் நிரந்தரமாக வசிப்பது தெரிந்தவுடன், துருவித் துருவி, உங்கப்பாவை துளைத்தெடுத்து உண்மையை தெரிந்துகொண்டாள்.
அவளுக்கு உங்கப்பா செய்தது மகா பாபம் என்று உறுதியாக எண்ணினாள், வருந்தினாள், ஏதும் செய்யமுடியாமல் தவித்தாள்.
திடீரென அவளுக்கு உடம்பு சரியில்லாமல் போய், டாக்டர்கள் கை விரித்தவுடன், அவள்